தேடல் தொடங்கியதே..

Friday 5 April 2013

கீழக்கரையில் 'தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' - மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியீடு !

கீழக்கரை அரசு மருத்துவமையில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கழகத்தின் தலைவர். A.M.S. தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இது வரை நம் கீழக்கரை நகரவாசிகள்  அரசின் மருத்துவ காப்பீட்டு பயன்களை பெற இராமநாதபுரம் அரசு மருத்துவமனையை நாடியே செல்ல வேண்டி இருந்தது. இப்போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் நம் கீழக்கரை அரசு மருத்துவ மனையிலேயே நல்ல முறையில் செயல் பட்டு வருகிறது.

CT ஸ்கேன், MRI ஸ்கேன் கூட, இங்கிருந்து பரிந்துரைக்கப்பட்டு இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. ஆகவே மருத்துவம் தேவைப்படும் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment