இராமநாதபுரத்தில் ரோட்டரி இன்டர் நேஷனல் மாவட்ட (3212) நிர்வாகிகளின் முயற்சியில், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையினருடன் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம், எதிர் வரும் 28.04.2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடை பெற உள்ளது.
ரோட்டரி இன்டர் நேஷனல் மாவட்டத்தின் (3212) நிர்வாகிகள் |
இதற்கான விழிப்புணர்வு கையேட்டினை, மாவட்ட கவர்னர். ரோட்டரியன் மேஜர் டோனர். H. ஷாஜஹான் அவர்கள் வெளியிட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர். ரோட்டரியன். இஞ்சீனியர். ஆசாத் S.S.ஹமீது அவர்கள் கூறும் போது "கீழக்கரை பகுதியை சேர்ந்த, சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் முகாமுக்கு அழைத்து வந்து, இலவச சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது பருவத்தினர் வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ECHO CARDIOGRAM என்கிற முறையில் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும், முகாமுக்கு வருபவர்கள், தங்கள் குழந்தைகளின் அனைத்து பழைய மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment