கீழக்கரையில்
குப்பைகளால் வஞ்சிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றாலும், தீராத வேதனையில்
குமுறிய பொதுமக்கள் தற்போது கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட
துவங்கியுள்ளனர். குப்பைகளை அகற்றுவதற்காக, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட
இயக்கங்களின் பல்வேறு தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, கடற்கரையை ஒட்டிய
கலங்கரை விளக்கம் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளால் அதிரடி நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டது.
இது... புதுசு ! |
இது... போன மாசம் ! |
அதே வேளையில் இன்னும் நகருக்குள் துப்புரவு பணியாளர்களால், பல காலங்களாக கண்டு கொள்ளப்படாத 'குப்பை களஞ்சியங்கள்' ஏராளமாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதில் ஒன்றாக பழைய குத்பா பள்ளி பின்புறம் உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதியும் (O.J.M.தெரு) இருந்து வந்தது. இந்த பகுதியில் காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகள், மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ( 9 வது வார்டு ) ஆகியோர்களின் ஏற்பாட்டில் இந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்தியதோடு நில்லாமல், இந்த பகுதியில் பொது மக்கள் அமர்வதற்கு சிமிண்டாலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அழகுச் செடி வகைகளும் நடப்பட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து
முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ( 9 வது வார்டு )அவர்கள்
கூறும் போது, "பல ஆண்டு காலமாக இந்த பகுதி குப்பை கொட்டும் இடமாகவே இருந்து
வந்தது. 'இங்கு குப்பைகள் யாரும் கொட்ட வேண்டாம்' என பொதுமக்களை பல முறை
வலியுறித்தியும் யாரும் கேட்ட பாடில்லை. இங்கு துர்நாற்றம் மிகுந்த கோழிக்
கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு நிலவி வந்தது. தற்போது மிக சுத்தமாக
இருப்பது பார்ப்பதற்கே மகிழ்ச்சி அளிக்கிறது.
இங்கு மீண்டும் குப்பைகள்
கொட்டுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணிக்கு ஆள்களை வைத்திருக்கிறோம். இங்கு யாராவது குப்பைகள் தட்டுவது தெரித்தால், அந்த குப்பைகள்
முழுவதையும் அள்ளி அவர்கள் வீட்டு வாசலில் கொட்டுவது என்றும் அவர்கள் மீது
சட்ட நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையரின் பார்வைக்கும் கொண்டு செல்வது
என்றும் என முடிவெடுத்து இருக்கிறோம்." என்று தீர்க்கமாக தெரிவித்தார்.
இதே போன்று அந்தந்த பகுதி இளைஞர்கள், மாணவர்கள், தெருவாசிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது இறைவன் நாடினால், கொசுப் பண்ணைகளாகத் திகழும் இந்த குப்பை மேடுகள் சுத்தமாக்கப்பட்டு, டெங்கு, மலேரியா, பைலேரியா, சிக்கன் குனியா என்று நீளும் நோய்களின் பட்டியல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சுகாதாரமான நகரமாக 'கீழக்கரை' உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
Comments :
இதே போன்று அந்தந்த பகுதி இளைஞர்கள், மாணவர்கள், தெருவாசிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போது இறைவன் நாடினால், கொசுப் பண்ணைகளாகத் திகழும் இந்த குப்பை மேடுகள் சுத்தமாக்கப்பட்டு, டெங்கு, மலேரியா, பைலேரியா, சிக்கன் குனியா என்று நீளும் நோய்களின் பட்டியல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சுகாதாரமான நகரமாக 'கீழக்கரை' உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
Comments :
- Ahamed Kuthubdeen Raja : அல்ஹம்துலில்லாஹ்...கனவு நனவாகிறது... உள்ளம் உவகை பெறுகிறது... இதைக் காணக் கண் கோடி வேண்டும்.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல செய்தி... குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த அனைத்து இளைஞர்கள் பட்டாளத்துக்கும், இறைவன் நல அருள் பாலிப்பான். இந்த பகுதி துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் நகராட்சிக்கு தேர்வாகிய வார்டு பகுதி எனபது குறிப்பிடத்தக்கது.
இனி மேலாவது பொது மக்களும் அங்கு குப்பைகளை போடாது நகராட்சியின் சுகாதார நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.. அதையும் மீறி சில கேடு கெட்ட ஜன்மங்கள் அசுத்தப்படுத்தினால் நகராட்சி துப்பரவு பணியாளர்கள் உடனுக்கு உடன் குப்பைகளை அகற்றி இன்று போல என்றும் மிளிர நடவடிக்கையில் ஈடு பட வேண்டும்..
நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த அப்ப்குதி ஒன்பதாவது வார்டு மக்கள் பிரதிநிதியும் , நகராட்சியின் துணை தலைவருமான சகோதரர் ஹாஜா முகைதீன் அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள். இது போல உங்கள் சேவை மேன்மேலும் தொடர நல் வாழ்த்துகள்..
இது சம்பந்தமாக கீழக்கரை டைம்ஸில் எமது பதிவு:
29 August 2012 சீரழிந்து போன நகர் சுகாதாரத்தை சீர் செய்ய ஆணையர் அவர்களும், நகராட்சி தலைவியும் எடுத்து வரும் முயற்சிகளை மனதார பாராட்ட கடமைப் பட்டுள்ளோம் பணிகள் தொய்வு இல்லாமல் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுகிறோம்.
மின்ஹாஜியார் பள்ளி முகப்பில் உள்ள சுகாதார சீர்கேட்டை சீர் செய்ய விரைந்து செயல்படுவதுடன் அருகில் உள்ள ஜும்மா நடைபெறும் பழைய குத்பா பள்ளி முகப்பிலும் கற்கள் மற்றும் கூழங்களை நீக்கி அந்த சாலையையும் காலதாமத்தை தவிர்த்து செப்பனிட அன்புடன் வேண்டுகிறோம்.