தேடல் தொடங்கியதே..

Tuesday, 31 July 2012

கீழக்கரை நக‌ர் நல இயக்கம் வழங்கிய 65 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான இலவச பள்ளிச் சீருடைகள் !

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பில் மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி தெருவிலுள்ள மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் நேற்று (30.07.2012) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஜனாப்.செய்யது இபுராகிம் தலைமை வகித்தார்.





பள்ளியின் தாளாளர் ஜனாப்.மன்சூர் அலி, இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஜனாப். முகமது சேக்தம்பி, மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், திரு. கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் ஜனாபா. சித்தி ஜரினா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.




முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி பிரேமா வரவேற்புரை ஆற்றினார். ஆலோசகர் திரு. பாரதி நன்றி கூறினார். இதில் 65க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கான பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் ஜனாப். கமால் நாசர், திரு. விஜயன், திரு. பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment