கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மலேரியா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட இல்லாததால், ஆங்காங்கே நின்று கொண்டும், சிகிச்சை மையத்தின் வாசல் அருகே தரையில் அமர்ந்தும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையினை, கடந்த மாதம் செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்த கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். உமர் அப்துல் காதர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக தனது அறக்கட்டளை சார்பில் பத்து இருக்கைகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கினார்.
இந்நிலையில் தற்போது ஏராளமான குழந்தைகள் மற்றும்
குழந்தைகள் மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற
வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இங்கு தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட
நாற்காலிகள் போடப்படாததால் மீண்டும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையினை, கடந்த மாதம் செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்த கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் ஜனாப். உமர் அப்துல் காதர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக தனது அறக்கட்டளை சார்பில் பத்து இருக்கைகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கினார்.
படம் : கீழக்கரை டைம்ஸ் |
இது குறித்து இங்கு சிகிச்சைக்கு வந்திருந்த சின்ன மாயாகுளத்தை சேர்ந்த திரு. இன்பராஜ் அவர்கள் கூறும் போது "இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தொண்டு நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட சேர்கள் எங்கே போனது? என்று தெரியவில்லை. இங்கு சிகிச்சைக்காக சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், அமர்வதற்கு வழியில்லாமல் படும்பாடு பரிதாபத்துக்குரியது. இது சம்பந்தமாக அங்குள்ளவர்களிடம் கேட்ட போது 'எல்லா நாளிலும் நோயாளிகளுக்கு சேர் போட முடியாதாம்; வாரத்தில் புதன் கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டும் தான் அந்த சேர்களை போடுவார்களாம். மற்ற நாள்களில் இந்த சேர்களை வாடகைக்கு விடுகிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
Comments :
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இங்கு மிகுந்த சிரமத்துடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமர்வதற்கும், ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கும் தொண்டு நிறுவனத்தால் வாங்கி கொடுக்கப்பட்ட சேர்களை பயன்பாட்டுக்கு போடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மலேரியா சிகிச்சை மைய ஊழியர்களின் இது போன்ற மெத்தனப் போக்கினால், இனி வரும் காலங்களில் யாரும் உதவக் கூட முன் வர மாட்டார்கள். உடனே நோயாளிகள் அமர்வதற்கு அந்த இருக்கைகளை உரிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
aru v2 la irukudu nu teriyala............
ReplyDelete