நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், தமிழகத்தில் 7,200 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதால் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்கி ஒழுங்கு முறைச் சட்டம், ஓய்வூதிய மறுபரிசீலனை, அயல்பணி ஒப்படைப்பு மூலம் வங்கிப் பணிகளை மேற் கொள்ள எதிர்ப்பு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து வங்கிகள் நேற்று (22.08.2012) தொடங்கிய இரண்டு நாள் வேலைநிறுத்ததால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கின. நம் கீழக்கரை நகரிலும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கீழக்கரை முஸ்லீம் பஜாரின் பிரதான சாலையான வங்கிச் சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் வங்கிப் பணப் பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், வெளிநாட்டு பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டன. கீழக்கரையின் மூன்று ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், அவசர பணத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த திடீர் வேலைநிறுத்தம் குறித்து அறியாத பொதுமக்கள் பலர் வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment