கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியில் சுதந்திர தின நாளன்று, தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி (லாப்டாப்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 80 க்கும் மேற்பட்ட +2 நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா லாப்டாப் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஜனாப்.ஹமீது அப்துல் காதர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினியினை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் ஜனாப். யூசுப் சாஹிப் தலைமை ஏற்று இருந்தார், தலைமை ஆசிரியர் ஹசன் இபுராகிம் வரவேற்றார்.
இவ்விழாவில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் ஜனாப்.உமர் அப்துல் காதர், ஜனாப்.சிராஜுதீன், கவுன்சிலர். முகைதீன் இபுறாகீம், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக ஜனாப்.ஹமீது அப்துல் காதர் அவர்கள் தேசியக் கொடியேற்றி,மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment