இஸ்லாமியா துவக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளருமான திரு.ஜோசப் சார்த்தோ அவர்கள் இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் நல்லடக்கம் சொந்த ஊரான, குளைச்சல் கடியாப்பட்டினம் கிராமத்தில் (நாகர் கோவிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில்) நாளை (11.09.2013) காலை நடை பெறுகிறது. ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களின் மறுமை வாழ்வுக்கும், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் நற் பொறுமையை தரவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு :
திரு மலைச்சாமி (A.O) அவர்கள் - 94421 05703
FACE BOOK COMMENTS :
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்தத் தருணத்தில் ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களின் பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினர், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் கீழக்கரை புதிய ஒற்றுமையும் துயரத்தில் இணைகிறது. கண்ணீருடனும் ஆற்றொணாத் துயரத்துடனும் ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களை வழியனுப்பி வைக்கிறோம்.
- Syed Abusalique Seeni Asana Cant Forget his voice.. when ever i visit complex his softness, caring and broad mind were unforgettable.. Sartho sir a great figure i really comes to knows this while me visiting gym, and when he stayed in hamna complex.. really missing a good one.. may the soul rest in peace.. (sartho sir in my marraige)
No comments:
Post a Comment