கீழக்கரையில் தற்போது புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. கீழக்கரையில் 20க்கும் மேற்பட்ட பள்ளி வளாகங்களில், நடை பெறும் இந்த முகாம்களில், அந்தந்த வார்டு பகுதி மக்கள், தாங்கள் வழமையாக வாக்களிக்கும் பள்ளிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு செல்பவர்கள், தங்கள் புகைப்படம், குடும்ப அட்டை நகல், பள்ளி அல்லது கல்லூரியில் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் உள்ளிட்டவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அக்டோபர் மாதம் 31ம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்தந்த வார்டு பகுதிகளில் நடை பெறும் முகாம்களில் விண்ணப்ப படிவத்தை அளித்து பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம்.
1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதி உடையவர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிகிறது. வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரைவாசிகள் ஊருக்கு வரும் வேளைகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில், விண்ணப்பங்களை அளித்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன் லைனிலும் புதிய வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைய தளத்திற்கு செல்ல கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான வழி முறைகள் :
No comments:
Post a Comment