தேடல் தொடங்கியதே..

Friday, 20 September 2013

கீழக்கரையில் த.மு.மு.கவினர் ஒட்டியுள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகள் - பெற்றோர்கள், தாய்மார்கள் கவனிக்க !

கீழக்கரை மற்றும் 500 பிளாட் பகுதிகளில் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்மணிகள், தாய்மார்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், தற்காலத்தில் கடை பிடிக்க வேண்டிய அத்தியாவசிய நடை முறைகள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இதனை வாசித்து செல்லும் பொதுமக்கள் அனைவரும், 'காலத்திற்கு ஏற்ற தகுந்த விழிப்புணர்வு' என தங்கள் அருமையான கருத்துக்களை, உள்ளச் சாரலாய் அள்ளி தெளித்தவாறு செல்கின்றனர்.

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை - நடுத்தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்றது !

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், கீழக்கரையில் அறவே மழை பெய்யாததால் 'கடும் வறட்சியான சூழ்நிலை' நிலவுகிறது.  பெரும்பாலான வீடுகளில் உள்ள கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குளிக்கவும், துணி துவைக்கவும் கூட தண்ணீர் இல்லாத நிலையே பல இடங்களில் உள்ளது. இன்னும் பல வீடுகளில் பல ஆயிரங்கள் செலவழித்து கிணற்றை ஆழப்படுத்தியும் நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 



இதனால் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்றிணைந்து, திறந்த வெளியில் 'மழை தொழுகை' நடத்த முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் இன்று (20.09.2013) வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர், கீழக்கரையில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மழை பொழிவை எதிர் நோக்கி, இறைவனை இறைஞ்சினர்.

FACE BOOK COMMENTS :
  • Keelakarai Ali Batcha ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு வாழ்க, வளர்க, ஓங்குக


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் அனைத்து முஹல்லா மக்களும் ஒற்றுமையாக சேர்ந்து, நபியவர்கள் காட்டி தந்த வழியில் ஒரு மழை தொழுகையை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர் பார்த்தால் இன்னும் நடக்கவில்லையே. யா அல்லாஹ். எங்கள் பாவங்கள் குற்றங்கள் அனைத்தையும் பிழை பொறுத்து மன்னித்து மழையை தந்தருள் நாயனே. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

கீழக்கரையில் 'சிறு நீரியல்' சிறப்பு மருத்துவ முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு !

கீழக்கரை ரோட்டரி சங்கம், முஹம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்ராக்ட் சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறு நீரியல் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (21.09.2013) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த முகாமில் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் சிறு நீரியல் துறை அறுவை சிகிச்சை தலைமை நிபுணர். திரு. டாக்டர். T.R.முரளி M.S., M.ch., (Uro) மற்றும் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளனர். 
 

கீழக்கரை பகுதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறும் பலர், ஆரம்ப சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டும், நிரந்தர நிவாரணத்தை தேடியும், மதுரைக்கோ  அல்லது சென்னைக்கோ சென்று மருத்துவம் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இந்த முகாமில் கொள்பவர்கள் ரூ.200 செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறு நீர் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. 

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த நடுத்தெரு மர்ஹூம். ஜனாப்.  A.M.M முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மனைவியும், செய்யது சீனி பரிதா, செய்யது சாகுல் ஹமீது, தாஜுன் ரசீதா, முஹம்மது இபுறாகீம், ஆயிசத்து ஜெசீலா, நெய்னா முகம்மது ரபீக்கா, ஜாகீர் ஹுசைன் ஆகியோர்களின் தாயாரும்,

இஞ்ஜினியர் அப்துல் கபூர், டாக்டர். கியாதுதீன், ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), அஹமது அஸ்ரப், பவுசுல் அமீன் ஆகியோர்களின் மாமியுமான 'மூனிச்சிமா ராத்தா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும்  ஜனாபா. A.M.S. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்கள் இன்று (20.09.2013) அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நடை பெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூமா. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : ஜாகீர் ஹுசைன் -  9840689316