கீழக்கரை மற்றும் 500 பிளாட் பகுதிகளில் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்மணிகள், தாய்மார்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், தற்காலத்தில் கடை பிடிக்க வேண்டிய அத்தியாவசிய நடை முறைகள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதனை வாசித்து செல்லும் பொதுமக்கள் அனைவரும், 'காலத்திற்கு ஏற்ற தகுந்த விழிப்புணர்வு' என தங்கள் அருமையான கருத்துக்களை, உள்ளச் சாரலாய் அள்ளி தெளித்தவாறு செல்கின்றனர்.



