அதே போல் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் நிர்வாக அதிகாரி (கிரேடு-4) பதவியில் 75 பணி இடங்களை நிரப்பிட குருப்-8 தேர்வு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 4,309 தேர்வுக்கூடங்களில் நடந்து வருகிறது. பகல் 1 மணி வரை குரூப்-4 தேர்வும், பிற்பகல் மாலை 5.30 மணி வரை குரூப்-8 தேர்வும் நடைபெறுகிறது.
|
கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி |
நம் கீழக்கரை நகரிலும் காலை முதலே, கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கீழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி, இஸ்லாமியா மேட்ரிகுலேசன் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி, மக்தூமியா உயர் நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் குரூப்-4 தேர்வினை
எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
|
FILE PHOTO |
முதல்முறையாக அனைத்து தேர்வுக்கூடங்களிலும் நடைபெறும் தேர்வு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் கீழக்கரையை சேர்ந்த தேர்வர்கள், முதன் முறையாக அதிகளவில் பங்கேற்று தேர்வு எழுதுவது, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
தேர்வினை எதிர் கொண்டிருக்கும் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment