நம் கீழக்கரை நகரில் வரலாற்று ஆய்வுகள் செய்து, முனைவர் பட்டம் பெறுவதற்காக சென்னையை சேர்ந்த நண்பர். திரு. சுந்தர் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அவர் தற்போது அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்திலுள்ள பல்கலைகழகத்தில் வரலாற்று மாணவராக பயின்று வருகிறார். இவர் "பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் முஸ்லீம்களின் கடல் வணிகமும், சமூகமும்" என்ற சிறப்பான தலைப்பின் கீழ் ஆய்வுகள் செய்து வருகிறார்.
இது சம்பந்தமாக நமதூரின் மூத்த குடி மக்களை சந்தித்து வரலாற்று பதிவுகளை திரட்டி வருவதோடு மட்டுமல்லாமல், அரிதாக சில மூத்தவர்களிடம் இருக்கும் ஓலை சுவடிகளையும், சில இடங்களில் காணக் கிடைக்கும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து வருகிறார்.
இதற்காக இவர் தமிழகத்தின் அனைத்து கடலோர முஸ்லீம்கள் வாழும் ஊர்களுக்கும் சென்று தகவல்கள் பெற்று வருகிறார். இது வரை பழவேற்காடு முதல் கடலூர், நாகப்பட்டினம், நாகூர், அதிராம்பட்டினம், தொண்டி, குளைச்சல் , தேங்காய் பட்டினம், காயல் பட்டினம் சென்று அறிய பல தகவல்களை சேகரித்து இருக்கிறார்.
ஒரு நல்ல தலைப்பின் கீழாக, ஆய்வு மேற்கொண்டிருக்கும் நண்பர். திரு. சுந்தர் அவர்களுக்கு, இன்னும் சிறப்பாக, அவர் ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கும் வகையில், இது பற்றி உங்களுக்கு தெரிந்த விபரங்களை அளித்து அவருக்கு உதவுமாறு, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் : திரு சுந்தர் அவர்கள் 9952009052
ஒரு நல்ல தலைப்பின் கீழாக, ஆய்வு மேற்கொண்டிருக்கும் நண்பர். திரு. சுந்தர் அவர்களுக்கு, இன்னும் சிறப்பாக, அவர் ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கும் வகையில், இது பற்றி உங்களுக்கு தெரிந்த விபரங்களை அளித்து அவருக்கு உதவுமாறு, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண் : திரு சுந்தர் அவர்கள் 9952009052
No comments:
Post a Comment