கீழக்கரை
பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பலர் வினோதமான காய்ச்சல்களால்
பாதிக்கப்படுவதும், இறுதியில் டெங்கு காய்ச்சல் என்று தெரிய வந்த சில
நாள்களிலேயே உயிரிழப்பதும், இறந்தவர் 'டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை'
என்று சுகாதாரத் துறையினர் முரண்டு பிடிப்பதும், சாக்கு போக்கு சொல்வதும்
வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம் கீழக்கரை மேலத்தெரு மாதிஹுர் ரசூல்
சாலையில் வசித்து வந்த யூசுப் சாகிபு மகள் ஹதிஜத் ரில்வியா (வயது
20) என்ற பெண்மணி ஒரு வார காலமாக காய்ச்சல் பாதித்து ராமநாதபுரம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இறுதியில் பரிசோதனை
செய்ததில் டெங்கு இருப்பதாக தெரிய வந்த அடுத்த நாளே, அவரின் பிறந்த நாளன்று உயிரழந்தார். கடந்த மாதம் கீழக்கரை பெரிய அம்பலார் தெருவை
சேர்ந்த பாத்திஹ் மவுலானா என்ற இன்ஜினியரிங் மாணவரும் டெங்கு
காய்ச்சலில் பலியானார். அதே போல் புது தெருவை சேர்ந்த அப்துல் வாஹிது
என்பவரின் ஒன்றைரை மாத குழந்தை டெங்கு காய்ச்சலால் உயிரழந்தது.
![]() |
இந்த குப்பைகளில் எல்லாம் டெங்கு கொசு உருவாகாதா ?? |
கீழக்கரையை
பொருத்தமட்டில் 'டெங்கு காய்ச்சல் இல்லவே.. இல்லை' என்று சுகாதாரத்துறையினர்
மறுத்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசின் நடவடிக்கையின் பேரில்,
நேற்று (02.10.2012) சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் கதிரேசன் தலைமையில்
அதிகாரிகள் கீழக்கரையில் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது
கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மேலும் அவர்களின் உத்தரவின் பேரில்
நகர் முழுதும் புகை மருந்து அடிப்பதற்கும், கிணறுகளில் டெமிபாஸ்
எனப்படும் மருந்து ஊற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மாத கணக்கில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது குறித்து இன்னும் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக, நீர்
தேங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குவளைகள், தெர்மாகோல் டப்பாக்கள்,
பழுதடைந்த குழாய்கள் குப்பைகளாக தேங்கி கிடக்கிறது. கடந்த வாரம் பெய்த மழை
நீரின் மிச்சங்கள் இவற்றில் தேங்கியுள்ளது. தெருக்கள் தோறும் வெறும் புகை
மாத்திரம் அடிப்பதால் எந்த பயனும் இல்லை. கொசுக்களின் பிறப்பிடமாகிய இது
போன்ற ஆணி வேர்களை அழிக்காத வரை, டெங்குவை ஒழிப்பதில் சாத்தியமில்லை.
Comments :


Comments :

- Jamaludeen Jamal : our people many of them r not knowing serious abut this, pls do street views meeting, to meet people ...
- Nazir Sultan : சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கீழக்கரை சுகாதாரத்தை பற்றிய வரிகள் உண்மையாகி கொண்டிருக்கிறது என்று அறியும்போது மிக மன கஷ்டமும் கவலையும் ஏற்படுகிறது.
மின்சார கட்டுப்பாடு..
எரிபொருள் தட்டுப்பாடு..
எனில்,
தங்கு தடையின்றி
இங்கு கிடைப்பது
டெங்கு மட்டுமே !

- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' : பொது மக்கள் அதிகம் புழங்கும் இது போன்ற பாதைகளில் குப்பைகள் மாத கணக்கில் குவிந்து கிடந்தால் டெங்கு காய்ச்சல் வராமல் என்ன செய்யும் ? டெங்கு கொசுக்களில் 500 பிளாட் டெங்கு கொசு, புது கிழக்குத் தெரு டெங்கு கொசு, பெரிய அம்பலம் தெரு டெங்கு கொசு என்று பிரிவினையா இருக்கிறது..??ஒரு இடத்தில் உருவாகும் கொசுக்கள் தான் நான்கு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நம் ஊரின் அனைத்து பகுதிக்கும் பாஸ்போர்ட், விசா இன்றி பறந்து வருகிறதே. இதில் குப்பைகளால் டெங்கு கொசு உற்பத்தியாகாது. நல்ல தண்ணீரில் அதுவும் காலையில் தான் இனப்பெருக்கம் செய்யும் என்று சுகாதாரத்துறையில் இருந்து ஒரு துப்புக் கெட்ட வாதம் வேறு.
சில
ReplyDeleteநாட்களுக்கு முன் நான் எழுதிய கீழக்கரை சுகாதாரத்தை பற்றிய வரிகள் உண்மையாகி கொண்டிருக்கிறது என்று அறியும்போது மிக மன கஷ்டமும் கவலையும் ஏற்படுகிறது.
மின்சார கட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு
எனில்
தங்கு தடையின்றி
இங்கு கிடைப்பது
டெங்கு மட்டுமே