நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கீழக்கரையில் நகராட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் இன்று (15.08.2013) காலை சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடைபெற்றது. கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினர் சார்பாகவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்களும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர்.
கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தில் தேசியக் கொடி ஏற்றும் காட்சி!
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் அலுவலக வாயிலில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியளவில் நடை பெற்றது. கழகத்தின் செயலாளர் ஜனாப்.M.U.V.முகைதீன் இபுறாகீம் வரவேற்புரை ஆற்றினார். கழகத்தின் துணைத் தலைவர் திரு.மாணிக்கம் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது கழகப் பொருளாளர் ஜனாப்.A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், துணைச் செயலாளர் B.செய்யது காசீம், நிர்வாகிகள் ஜனாப்.N.முசம்மில் ஹுசைன், ஜனாப்.M.சீனி முஹம்மது சேட், L.பவுசுல் அமீன் உள்ளிட்ட கழக அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 67 வது சுதந்திர தின திரு நாளிலே, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment