கீழக்கரையில் மழை பெய்யாததால் கடும் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வீடுகளில் உள்ள கிணறுகள் நீர் வற்றிக் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக மழை தொழுகை நேற்று (15.08.2013) காலை 7:30 மணிக்கு தெற்கு தெரு 'கிஸ்கிந்தா திடலில்' நடை பெற்றது.
இந்த தொழுகையில் கீழக்கரை நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். மேலும் TNTJ அங்கத்தினர்கள் மாவட்ட துணை தலைவர் நசுருதீன் தலைமையில் நிர்வாகிகள் ஜஹ்பர் சாதிக்,உமர் பாரூக், ஹாஜா முஹைதீன், சபீக், அமீர் அப்பாஸ், சுல்தான் ஆகியோர்கள் கலந்து கொண்டு தொழுதனர். மாநில பேச்சாளர் அர்சாத் அலி தொழுகை நடத்தினார்.
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கீழக்கரை
No comments:
Post a Comment