கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில், மின்சார வாரியத்தினரின் மெத்தனப் போக்காலும், நகாரட்சி அதிகாரிகளின் அக்கரையின்மையாலும், வீடுகளுக்கு செல்லும் மின்சார வயர்கள், சிறுவர்கள் கூட எட்டிப் பிடிக்கும், கை தொடும் தூரத்தில் செல்கின்றது. இன்னும் பல இடங்களில், மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில், மிக மோசமாக உயிர் பலி வாங்க காத்திருக்கிறது.
இடம் : நடுத் தெரு பெத்தம்மா கபுரடி அருகாமை - கீழக்கரை
இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் துணைச் செயலாளர். B.செய்யது காசீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகரின் ஒட்டு மொத்த மின் கம்பங்களும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டவை.
ஒவ்வொரு முறையும் கீழக்கரை நகராட்சி 'சாலை போடுகிறோம்' என்கிற பெயரில், முறையாக பழைய சாலைகளை தோண்டி போடாமல், அதன் மேலேயே அவசரக் கோலத்தில் போடுவதாலும், சாலைகள் ஏகத்திற்கு உயர்ந்து மின்சார வயர்கள் எல்லாம் கை தொடும் தூரத்திற்கு வந்து விட்டது.
இன்னும் சில இடங்களில் மின்சார வாரிய ஊழியர்களின் 'அடாவடி' மெத்தனப் போக்கால் உயர் அழுத்த மின் வயர்கள் கூட தரையில் தவழ்கிறது. இதனை உடனடியாக சீர் செய்ய ஆணையிடக் கோரி மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும் :
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும் :
கீழக்கரையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் உயிர் பலி ஆபத்து - உடனடியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை !
No comments:
Post a Comment