கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் இன்று (15.08.2013), காலை 9 மணியளவில், இந்திய தேசத்தின் 67 வது சுதந்திர தின விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A. முஹம்மது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். B.J.சாதிக் அவர்கள், பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். ஜனாப். M.M.S.செய்யது இப்ராஹீம் அவர்கள், கல்விக் குழு உறுப்பினர். M.K.M.சுஐபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் மாணவிகள் ரோசன் சமீஹா, ஸ்மைலா மற்றும் மாணவர். அஜீத் மணிகண்டன் ஆகியோர்கள் இந்திய சுதந்திர தினம் குறித்து சிறப்பாக பேசினர். முன்னதாக மாணவர்களின் சுதந்திர தின விழா அணி வகுப்பு மரியாதயை பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். சாதிக் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
சமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சா. சையது அபுதாகிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுதந்திர தின விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல் : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா.மூனா சுல்தான் அவர்கள்
No comments:
Post a Comment