கீழக்கரை கிழக்குத் தெரு பால் பண்ணை அருகில் நேற்று பெருநாள் தினத்தன்று (09.08.2013), சரியாக காலை 7.30 மணிக்கு நடை பெற்ற திடல் தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். இதே நேரத்தில் 500 பிளாட் டீச்சர்ஸ் காலனி அருகாமையில் TNTJ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திடலிலும், தெற்குத் தெரு அக்சா நகர் அருகாமையில் அமைக்கப்பட்டு இருந்த திடலிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது.
No comments:
Post a Comment