தேடல் தொடங்கியதே..

Friday 6 July 2012

கீழக்கரையை சேர்ந்தவருக்கு சவூதி அரேபியாவில் கோமா நிலை - இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகோள் !

கீழக்கரை தம்பி நெய்னாப் பிள்ளை தெருவைச் சேர்ந்த, மர்ஹூம் ஜனாப். செய்யது அப்துல் காதர், மர்ஹூம். ஜனாபா. செய்யது ராவியத்தும்மால் ஆகியோர்களின் மகனார் ஜனாப். முஹம்மது மௌலா தம்பி அவர்கள் கடந்த வாரம்  உடல்நிலை குறைவு காரணமாக தற்போது சவூதி அரேபியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்து வருகிறார்.

இவர்  30 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியா நாட்டிலுள்ள ரியாத் நகருக்கு அருகில் சொந்தமாக, சிறிய அளவில் கடை வைத்திருக்கிறார். தற்போது மிகுந்த சிரமத்துடன் கோமாவில் இருக்கும் இவர்களுக்கு, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இறைஞ்சுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

யா அல்லாஹ்,  இவ்வுலகத்தில் சிரமமில்லாத வாழ்க்கையை இவர்களுக்கு தந்தருள்வாயாக.. தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக... மறுமை வாழ்க்கையை வெற்றியான வாழ்வாக ஆக்கி அருள் புரிவாயாக... ஆமீன் !

1 comment:

  1. எனது பாசமிகு சாச்சா அவர்கள் விரைவில் பரிபூரண நலம் பெற, அனைவரும் எல்லாம் வல்ல ஏகன் 'அல்லாஹ்'விடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விதிகளை மாற்றக் கூடிய சக்தி, நாம் இறைவனிடம் இறைஞ்சி கேட்கும் 'துஆவுக்கு' நிச்சயம் உண்டு. இறைவன் நாடினால், உங்கள் தொழுகைகளில் மறக்காமல் துஆ செய்யுங்கள்.. வல்ல நாயன் நம் அனைவரையும் பாதுகாப்பான்.. ஆமீன்

    ReplyDelete