தேடல் தொடங்கியதே..

Saturday 6 July 2013

கீழக்கரை 'டாட் காம்' வலை தளத்தில் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ’அப்ளிகேசன்’ உதயம் - இணைய வாசகர்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை நகரில் நடந்தேறும் செய்திகளை, உலகெங்கும் வாழும் கீழக்கரை நண்பர்கள் அறிந்து கொள்ளும் நோக்கோடு, கீழக்கரை நண்பர்களால், கீழக்கரை 'டாட் காம்' உருவாக்கப்பட்டு, கடந்த 04.06.2010 அன்று கீழக்கரை வடக்குத் தெருவை  சேர்ந்த, ஈடிஏ குழும மனித வளத்துறை செயல் இயக்குனர் M.Y. அக்பர் கான் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக இடை விடாது இயங்கி வருகிறது. தற்போது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அனைவரும் தங்களுடைய கைப்பேசியினூடே ஒரு சொடுக்கில் பதிவுகளை வாசிக்கும் வண்ணம், ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் அப்ளிகேசன்களை உருவாக்கி இருக்கிறது.



அதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று 05.07.2013) அமீரகத்தின் முக்கியஸ்தலமாகிய துபை மால் வளாகத்தில் நடைபெற்றது. மிக எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை.காம் குழுவை சேர்ந்தவர்களும், இதர நண்பர்களும் குழுமி அப்ளிகேசன்களை செயல்படும் வண்ணம் இணையதளத்தில் பதிவேற்றினர். இந்த அப்ளிகேசனைப் பற்றிய சிறிய கலந்தாய்வுப் பட்டறையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இணைய வாசகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.



கீழக்கரை.காம். இணைய முகவரி 







 புகைப் பட விளக்கம் :  
கீழக்கரை டாட் காம் நிர்வாகிகள் 

சீனி முஹம்மது,தாஹா இப்ராஹீம், ஹமீது சமது ஃபத்தா, முஹம்மது மிட்லஜ், அபு பைசல், கீழை இளையவன் என்கிற முஹம்மது சாலிஹ் ஹுசைன், கீழை ராசா என்கிற ராஜாகான் முஹம்மது, செய்யது இப்ராஹீம் அலி, ஹமீது பைசல், ஹமீது யூசுப் பக்ஸ், முஹம்மது ரசீம் 

இது குறித்து கீழக்கரை டாட் காம் வலை தளத்தின் முதன்மை நிர்வாகி ஹமீது சமது ஃபத்தா அவர்கள் நம்மிடையே பேசும் போது "கீழக்கரையில் நடை பெறும் அன்றாட செய்திகளையும், கீழக்கரை நகர் தகவல்கள் பலவற்றையும் தாங்கி வருவதோடு, வளைகுடாவின் வேலை வாய்ப்பு செய்திகள்,விழிப்புணர்வு செய்திகள்,வபாத்து செய்திகள் உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் அளித்து வருகிறோம்.தற்போது துவங்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன்களும்,வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். 

நமதூர் வியாபார விளம்பரங்களையும் வழங்கி பல புரவலர்கள் இதற்கு உறுதுணையாய் இருந்து வருகின்றனர். நமதூர் வியாபார நண்பர்கள், தங்களுடைய வியாபார முன்னேற்றத்திற்கு கீழக்கரை.காம் ல் விளம்பரங்கள் பிரசுரிக்க விரும்புபவர்கள் வரவேற்கப்படுகின்றனர். மேலும் வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு, கீழக்கரை டாட் காமின் நண்பர்கள் குழு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


கீழக்கரை டாட் காமின் மற்றுமொரு நிர்வாகி கீழை ராஜா என்கிற ராஜா கான் முஹம்மது அவர்களின் கருத்துப் பதிவில் "கல்வெட்டுகளிலும், காகிதங்களிலும் பதிக்க பட்ட வரலாறுகள், காலத்தால் அழிந்து விடக்கூடியது என்பதால் இணையத்தில் நம் வரலாற்றை நவீன கல்வெட்டுகளாக செதுக்கி கீழக்கரை வரலாற்றில் இடம் பெற போகும் தம்பிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...இந்த சாதனை சரித்திரத்தில் ஊரில் அக்கரை கொண்ட அனைவரும் இணைய வேண்டுமென்ற உங்களின் எண்ணத்திற்கு எல்லாம் வல்லோன் நற்கூலி வழங்குவானாகவும் ஆமீன்." (அன்புடன் கீழைராஸா (முகம்மது ராஜாக்கான்) துபாயிலிருந்து...)


ஆன்ட்ராய்ட் கைப்பேசி மற்றும் டேப்ளட்களுக்கு கீழ் காணும் இணைப்பை சொடுக்கி பதிவிறக்கிக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்ட் கைப்பேசி மற்றும் டேப்ளட்களுக்கு :

தொடர்புக்கு:

ஹமீது சமது ஃபத்தா – 00919629900405 / 00971-55-5150616


கீழக்கரை டாட் காமின் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரை அஹமது தெரு சிறுவர்கள் மதரசாவின் ஆண்டு விழா - ASWAN பொது நல சங்கம் சார்பாக அழைப்பிதழ் !

கீழக்கரை அஹமது தெருவில், சிறப்பாக செயல்பட்டு வரும் மதரஸதுல் அல்-மனார் சிறுவர்கள் அரபி மதரசாவின் ஆண்டு விழா, அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தின் சார்பாக, நாளை (07.07.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில், பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ASWAN பொது நல சங்கம் வெளியிட்டுள்ளது.





இது குறித்து ASWAN பொது நல சங்கத்தின் செயலாளர். 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இறைவன் அருளால், இந்த வருடம் மதரசாவில் பயின்ற 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, கிராஅத் போட்டி, குர்ஆன் சூராக்கள் ஒப்புவித்தல் போட்டி போன்றவைகளை நடத்தி 70 பரிசுகளை, இவ்விழாவில் வழங்க இருக்கிறோம். 

மார்க்க அறிஞர்களும், நல்ல பயனுள்ள தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள். இது போன்று இளம் வயதில் மார்க்க கல்வியை கற்கும் பொருட்டு ஊக்குவிக்கும் போது, இறையச்சம் உடைய நல்ல மனிதர்களை, சிறந்த இளைய தலை முறையினரை உருவாக்க முடியும். இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :

  • A.s. Traders அஸ்ஸலாமு அழைக்கும் !

    அன்புடையீர்

    கீழக்கரையில் நமது அஹமது தெரு சிறுவர்கள் மதரசா ஆண்டு விழா வரும் 07-07-2013 அன்று இரவு 7.00 மணி அளவில் அஹமது தெரு பெண்கள் தொழுகை பள்ளியில் இன்ஷா அல்லா நடைபெற 

    இருக்கிறது ,இந்த விழாவிற்கு நமது ஊரின் அனைத்து பொது மக்களும் கலந்து சிறப்பித்து தருமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம் .

    இப்படிக்கு 

    கீழை ASWAN
    4 hours ago · Like · 3
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல செய்தி.. இது போன்ற அடிப்படை மார்க்க கல்வி மதரசாக்களை, எல்லா தெருக்களிலும் முனைப்புடன் நடாத்த, அந்தந்த பகுதி இஸ்லாமிய மக்கள் முன் வர வேண்டும். அஹமது தெரு ASWAN சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
  • Jaffar Nainaஇதுபோன்றமார்க்கநிகழ்வுகளுக்குநம்மக்கள்முழுஆதரவுதரவேண்டும்விழாசிறக்கஇறைவனிடம்துவாசெய்கிறேன்ஆமீன்
    46 minutes ago via mobile · Like · 1

கீழக்கரையில் அபாய மின் கம்பத்தை அச்சத்துடன் கடக்கும் பொது மக்கள் - ஆபத்து ஏற்படும் முன் சீர் செய்யப்படுமா .?

கீழக்கரை புதிய  நிலையம் அருகே தீனியா மெட்ரிகுலேசன் பள்ளிக்கு செல்லும் பாதையில் ஒரு இரும்பு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், கனரக வாகனம் ஒன்று தறி கெட்டு மோதியதில், முற்றிலும் சேதமடைந்து, அதன் கீழ் பகுதி வளைந்து நிற்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. மேலும் இந்த மின் கம்பத்திலிருந்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகத் தாழ்வாக தொங்கி சென்று கொண்டிருக்கிறது. 



இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் இடமாகும். பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், மின் கட்டண வசூல் மையம், பள்ளிகள் போன்றவை இதனருகே உள்ளதால், மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இப்பகுதியை கடந்து செல்பவர்கள், "எங்கே தலையில் விழுந்து விடுமோ..?" என்கிற அச்சத்துடன் செல்கின்றனர். 



இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT) செயலாளர். S.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "மின் கம்பத்தில் வாகனம் மோதிய உடனே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் பயன் ஏதுமில்லை. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததோடு சரி. இன்று வரையிலும் மின்கம்பத்தை சீர் செய்ய எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.மின் கம்பத்தை சேதம் ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடமிருந்து உரிய தொகையை, உடனடியாக வசூலித்துக் கொண்ட மின் துறையினர், இன்னும் மின் கம்பத்தை மாற்றாமல் பாராமுகமாக இருக்கின்றனர்." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :


  • Ams Thameemudeen Seiyya padumaa endra kelviyai munvaippathaivida, vaikkavenddum endru aanaiyiduvom, arasaangam enbathu nammil oruvarthaan
    9 hours ago via mobile · Unlike · 3
  • Keelai Ilayyavan உண்மை தான் தலைவரே... ஆனால் இன்னும் நம் இந்திய தேசத்தில் சாமானிய குடிமகனுக்கு ஆணையிடும் அரசியல் சாசனம் அமையப்படவில்லை. 

    நம்மால் இயன்றது 
    புகார் செய்யலாம் 
    மனு அளிக்கலாம் 

    அதிகாரிகளை அணுகலாம் 
    செய்தி வெளியிடலாம் 

    ஆணையிடும் 
    அதிகார சிம்மாசனம் 
    இன்னும் வாய்க்க வில்லை 
    சாமானியனுக்கு 
    'பொறுமை' காப்பதை தவிர 

    இது போன்ற 
    உயிருக்கு ஊரு விளைவிக்கும் வேளைகளில், 
    நம் அரசாங்கம் மட்டுமே ஆணையிடுமாம்...

    விலை மதிப்பற்ற மனித உயிர்களை 
    பிணைகளாய் பெற்றுக் கொண்ட பின்னர்..!

    (இறைவன் காப்பாற்றுவானாக)
    8 hours ago · Like · 8
  • Barakath Ali Machan naama irupathu india vil inkay oolal athiham sevai romba kammi varum mun kaakka maattaarkal vanthathumthaan nerpada pesu maraimuhamaaha pesu nijam poi ippadi tv I'll utkaanthu vilambaram theduvaarkal
    8 hours ago · Like · 2
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மின் சார வாரியத்தினர், சேதம் ஏற்படுத்திய வாகன உரிமையாளரிடம் இருந்து 13500 ஐ இழப்பீடாக பெற்று ஒரு வாரம் ஆகி விட்டது. ஆனால் இன்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாவாவது விழும் வரை பொறுத்திருக்கத் தான் வேண்டும் போல தெரிகிறது.

Friday 5 July 2013

கீழக்கரை நகரில் நடை பெற்ற 'மஸ்ஜிது கதீஜா' பெண்கள் தொழுகைப் பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சி!

கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவை அடுத்த பெரிய காடு மனாஸில் கார்டனில் 'மஸ்ஜிது கதீஜா' பெண்கள் தொழுகைப் பள்ளிவாசல் இன்று (05.07.2013) 3.30 மணியளவில் திறக்கப்பட்டு, அஷர் தொழுகை நடை பெற்றது.

இந்த பள்ளிவாயிலை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த சகோதரர்கள் க.அ.ம. உமர் சாகிபு மற்றும் க.அ.ம. சேகு மதார் சாகிபு (முக்தார்) ஆகியோர்கள் நிர்மாணித்து, பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், முறைப்படி வக்பு செய்ய இருக்கிறார்கள். 

இந்த பள்ளியை ஆர்கிடெக்ட் கபீர் அவர்கள் அழகிய வடிவில் கட்டுமானம் செய்து அளித்து உள்ளார். இந்த விழாவிற்கு ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர். 

இந்த பள்ளி வாயிலின் திறப்பு விழாவினை பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். 'மஸ்ஜிது கதீஜா' பள்ளியை க.அ.ம. உமர் சாகிபு  அவர்கள் திறந்து வைத்தார்.









இந்த விழாவில் முப்தி அ.உமர் ஷரீப் காஸிமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.  க.அ.ம. உமர் சாகிபு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை டவுன் காஜி A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இந்த விழாவின் இறுதியில் மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் ஜமாலி அவர்கள் துஆ ஓதினார். 



நிகழ்வுகளை லெப்பை தம்பி அவர்கள் தொகுத்து அளித்தார். இந்த பள்ளியின் பின் புறத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயரில் வணிக வளாகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு கட்டுமான பணிகள்  நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா - பொது மக்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் 2013-2014-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று முன் தினம் (03.07.2013) புதன் கிழமை மாலை 4 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இவ்விழாவில், கடந்த ஆண்டின் ரோட்டரி சஙகத்தின் கீழக்கரை தலைவர் Er.ஆசாத் S.S.ஹமீத் தலைமை வகித்தார். புதிய தலைவராக டாக்டர்.M.H.செய்யது ராசீக்தீன் அவர்களும், செயலாளராக Er.R.சுப்பிரமணியன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 


சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் M.அசோக் பத்மராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு கவுரவிப்பாளராக S.R.தீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் ரோட்டரி உதவி கவர்னர் S.R.முருகேசன், பேராசிரியர் A.அலாவுதீன் உள்ளிட்டோர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.


இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் திரளாளாக கலந்து கொண்டனர். 



இந்த நிகழ்வின் போது, கீழக்கரை நகரில், அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளுக்கும் பாராட்டு சான்றும், நினைவுப் பரிசும் வழங்கினர். மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு மூன்று சக்கர வாகனமும், ஏழைப் பெண்மணி ஒருவருக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.




கீழக்கரை ரோட்டரி சங்க புதிய நிர்வாகளின் சேவைகள் மென் மேலும் சிறக்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.