தேடல் தொடங்கியதே..

Saturday 27 July 2013

கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில், பன்னெடுங்காலமாக ரமலான் மாதம் முழுவதும், நோன்பாளிகளுக்காக, சுவைமிகு நோன்புக் காஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. வடக்குத் தெரு ஜமாத் பகுதியினர் மட்டுமல்லாது, கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இங்கு வரும் பெரியவர்களும், சிறுவர், சிறுமியர்களும் வரிசையில் நின்று நோன்புக் கஞ்சியினை வாங்கிச் செல்கின்றனர்.


நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)



<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

Friday 26 July 2013

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! (ரமலான் ஸ்பெஷல் - பகுதி 8)

கீழக்கரை நகரில் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இன்று (26.07.2013) மாலை 6.30 மணியளவில், கீழக்கரை கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் கிழக்குத் தெரு ஜமாத்தினர்களும், பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.



முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு SDPI நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI நகர் பொருளாளர் சித்திக் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபூபக்கர் சாகிபு, ஜமாஅத் துணைத் தலைவர் அமீர் ஷாஜஹான், ஹைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். ஜகுபர் சாதிக்,

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேஷன் மாஸ்டர் - ஓய்வு), சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். தங்கம் இராதாகிருஷ்ணன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர். அலாவுதீன், மௌலவி அல்தாப் ஹுசைன் மன்பஈ, மௌலவி சம்சுதீன் ஆலீம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

SDPI கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் பாப்புலர் ப்ஃரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் நவாஸ்கான் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் SDPI கட்சியின் நகர் இணைச் செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றியுரை வழங்கினார்.



நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

கீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து தமுமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்தும், முறையான குடிநீர் வழங்க கோரியும், தமுமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (26.07.2013) வெள்ளிக் கிழமை மதியம், ஜும்மா தொழுகைக்குப் பின்னர், 2 மணியளவில் கீழக்கரை முஸ்லீம் பஜார், லெப்பை மாமா டீக் கடை முன்னதாக நடை பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, நகராட்சி நிவாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 




இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர். மண்டலம் ஜெய்னுலாபுதீன், தமுமுக  நகர் தலைவர் சிராஜுதீன், தமுமுக மூத்த தலைவர். அன்பின் ஹசன், 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்தஆர்ப்பாட்டத்தின் முடிவில் பின் வரும் ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, மமக திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகு தாவூது சாதிக், மமக துணை செயலாளர் புகாரி, PRO கமால் நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


முதல் தீர்மானத்தை வளைகுடா நிர்வாகி நண்பர்.கீழை இர்பான் அவர்களும், இரண்டாம் தீர்மானத்தை தமுமுக துணைத் தலைவர் கோஸ் முஹம்மது அவர்களும், மூன்றாம் தீர்மானத்தை தமுமுக துணை செயலாளர் பவுசுல் அமீன் அவர்களும், நான்காம் தீர்மானத்தை மமக நகர் செயலாளர் இக்பால் அவர்களும்,

ஐந்தாம் தீர்மானத்தை தமுமுக வணிக அணி செயலாளர். சலீம் அவர்களும், ஆறாம் தீர்மானத்தை தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் அவர்களும் எழுச்சியுடன் வாசித்தனர். இந்த ஆர்பாட்ட முடிவில் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அன்வர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! (ரமலான் ஸ்பெசல் பகுதி - 7)

இஸ்லாமிய பெருமக்களின் புனித ரமலான் நோன்பு மாதம் துவங்கி, இறைவன் அருளால் வெகு சிறப்பாகவும், அதி விரைவாகவும் நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள், இறைவனின் கட்டளையை அடியொட்டி, இறைவனின் நேசத்தை, அன்பை பெறும் நோக்கோடு, நோன்பெனும் மாண்பினை நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்த நோன்பு நிகழ்வுகளை, சவூதி அரேபியாவின் ஜித்தாஹ், மதினா, பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், இந்தியாவில் நியூ டெல்லி, கொல்கத்தா, ஹைதராபத் மற்றும் ஜெருசேலம், இந்தோனேசியா, பாலஸ்தீனம், பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புகைப்படக் கலைஞர்கள், மிக அழகாக புகைப்படம் எடுத்து தந்திருக்கிறார்கள். 

இந்த அற்புதமான புகைப்படங்களின் கோர்வையை 'முதுவை ஹிதாயத்' அவர்கள், தன் முக நூலில் நண்பர்களுடன் பகிர்ந்திருந்தார். அவற்றை நீங்களும் இரசித்துப் பார்வையிடுங்களேன்...


முதல் நோன்பின் போது, ஒரு பாகிஸ்தானிய சிறுவன் நோன்பு திறப்பதற்கான உணவுகளை வரிசையாக வைக்கிறான். (இடம் : மெமான் மசூதி, கராச்சி, பாகிஸ்தான்)


நோன்பின் முந்தைய தினம் ஒன்றில், தொழுது கொண்டிருப்பவர்களை ஒரு மழலை உற்று நோக்குகிறது. (இடம் : ஸ்ட்ராஸ் பக் கிராண்ட் மசூதி, பிரான்ஸ்)


 ஒரு இளம் சிறுமி, நோன்பு திறப்பதற்கான உணவுகளை அடுக்கி வைக்கிறார் (இடம் : ஜும்மா மசூதி, புது டெல்லி)

 

ஒரு பாகிஸ்தானியர், நோன்பு திறப்பதற்கான, ரோஸ்மில்க் போன்ற உணவு வகையை, ஊற்றி வைக்கிறார். 

ஒரு பள்ளியில் நோன்பு திறப்பதற்கான உணவுகள் வைக்கப்படுகிறது. அருகில் ஒரு பாகிஸ்தானிய சிறுவன் இறைவனை இறைஞ்சுகிறான். (இடம் : கராச்சி பள்ளிவாசல், பாகிஸ்தான்)

முதல் நோன்பு தினத்தில், தொழுகைக்குப் பின்னர், இறைவனுடன் கையேந்தும் இந்தியர் (இடம் : முகல் இரா மசூதி, புது டெல்லி)

ரமலான் இரண்டாம் நாளன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றும் பெண்மணிகள் (இடம் : லாகூர் பள்ளிவாசல், பாகிஸ்தான்)

ரமலான் முதல் நோன்பை திறக்க, கண்ணியமுடன் அமர்ந்திருக்கும் சவூதியர்களும், வெளி நாட்டவர்களும் (இடம் : துறைமுக நகரம் ஜித்தாஹ், சவூதி அரேபியா)

மழைப் பொலிவுக்கு மத்தியிலும், ரமலான் இரண்டாம் நோன்பன்று, வெள்ளிக் கிழமை ஜும்மா  தொழுகையை, சாலையில் நிறைவேற்றும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : கொல்கத்தா)

ரமளானில் முதல் வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர், இறை வேதத்தை ஓதும் ஈரானியர் (இடம் : ஈரானிய தலை நகரம், டெஹ்ரான்)

 ஒரு பாரம்பரிய தொப்பி வியாபாரியின் கடை (இடம் : பாகிஸ்தான்)


இப்தார் விருந்து நிகழ்ச்சி (இடம்: முஹம்மது நபியவர்கள் பள்ளி, மதீனா)

ரமலான் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, பள்ளியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் (இடம்: பத்சாஹி பள்ளிவாசல், லாகூர், பாகிஸ்தான்)

ரமலான் முதல் நாளன்று தொழுகையை நிறைவேற்றும் இந்தோனேசியா இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : ஜகார்தா பள்ளிவாசல், இந்தோனேசியா)

 தொழுகைக்குப் பின்னர், சற்று ஓய்வெடுக்கும் பாலஸ்தீனிய நோன்பாளிகள் 

ரமளானின் முதல் ஜும்மா தொழுகைக்குப் பின்னர், மகிழ்வோடு வெளிவரும் சிறுமிகள் (இடம் : அல் அக்ஸா பள்ளி வளாகம், ஜெருசேலம்)

ரமலான் பிறையை காணும் முன்னதாக, மாலை தொழுகையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள் (இடம் : மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத், இந்தியா)


நோன்பு திறக்க ஆயத்தமாக இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : சவூதி ரெட் சீ போர்ட், ஜித்தாஹ்)








நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

Thursday 25 July 2013

கீழக்கரை நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாண்டு 'சாதனை' மலர் - 'வேதனை' தான் மலர்ந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குமுறல் !

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த 24.07.2013 அன்று தினப் பத்திரிக்கை ஒன்றில் நகராட்சியின் இரண்டாண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏறத்தாழ 5 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, பெரும்பாலான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. 



நிறைவடைந்ததாக கூறப்படும் பணிகள் குறித்தும், இன்னும் தரமில்லாமல் தொடரும் பணிகள் குறித்தும், கீழக்கரை வாழ் பொது மக்களும், உலகெங்கும் வாழும் கீழக்கரை சமூக ஆர்வலர்களும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் கீழக்கரை நகரின் பல பகுதிகளில் சாலை மேம்பாடு, குடி நீர் வசதி, வாருகால் சீரமைப்பு, தெரு விளக்கு பொருத்துதல் போன்ற திட்டங்கள் முறையாக செயல்படுத்தாமல் இருக்கும் போது இது போன்ற சாதனை மலர், வேதனை தருவதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இந்த விளம்பரம் செய்தித் தாள்களை மட்டும் தான் அலங்கரிக்கிறது. அது நமது ஊரை அலங்கரிக்கவில்லை.

கடந்த இரண்டாண்டுகளில், நகராட்சி ஒப்பந்ததாரர்களால் நடை முறைப்படுத்தப்பட்ட தரமற்ற பணிகளால், ஊரெங்கும் பல்லாங்குழி சாலைகளும், வழிந்தோடும் சாக்கடைகளும், தெரு விளக்குள் இல்லாமல் இருள் சூழ்ந்த தெருக்களும் மட்டும் தான் இருக்கிறது.  

இது போன்று சாதனை மலர் வெளியிடுவது, வெறும் கண் துடைப்பேயன்றி வேறில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

இது குறித்து துபாயிலிருந்து சமூக ஆர்வலர். நஜீம் மறைக்கா அவர்கள் கூறும் போது "நகராட்சி சார்பாக, செய்தி தாள் ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கும்  இரண்டாண்டு சாதனை மலர் தகவல் அறிவிப்பில் ஜொலிக்கும் பெயர்களில் உள்ள நகராட்சி உறுப்பினர்கள் என்ன சொல்ல போகிறார்கள்...?

எதற்கெடுத்தாலும் கோஷம் போட்டவர்கள், தங்கள் பெயர்களை, சாதனை மலரில் கலர், கலராக போடுவதற்கு எப்படி அனுமதித்தார்கள்.

அப்ப அதெல்லாம் விளம்பரம் மற்றும் காசு.. பணம்... துட்டு... மணி... மணி தானா...???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FACE BOOK COMMENTS : 

Like ·  · Unfollow Post · Share · Edit
  • Abu Siddique Veliyoor vazh keelai nanbarkalukku theriyapadutha vendum. Pala kodigalukku poi kanakku kattapattulathu nenjam kumurugirathu.
    3 hours ago · Like · 2
  • Abu Siddique Irandandu saathanaigal (kollaigal) moondramandum thodarum....

    By 

    Kilakarai Municipality
    3 hours ago · Like · 1
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' தமிழக அரசால் கீழக்கரை நகராட்சிக்கு, இது வரைக்கும் இல்லாத அளவிற்கு குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அம்மா அடிக்கடி சட்ட சபையில் முழங்குவது போல 'முந்தைய தி.மு.க மைனாரிட்டி ஆட்சி காலத்தில்' இல்லாத அளவிற்கு, கடந்த இரண்டாண்டுகளில் சுமார் ஏழரை கோடி ரூபாய் வந்துள்ளது. 

    நகரின் வளர்ச்சிப் பணிக்காக வந்த இந்த மக்கள் பணம், தரம் கெட்ட ஒப்பந்ததாரர்களாலும், பணம் முழுங்கி நகராட்சி அதிகார மகாதேவன்களாலும், கேடு கெட்ட சில கயவ கவுன்சிலர்களாலும், கூறு போடப்பட்டு, வீணடிக்கப்பட்டு வீதியெங்கும் வீச்சம் சாக்கடை நாற்றத்தையும் தாண்டி பவனி வருகிறது. 

    கீழக்கரை மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க வந்த இந்த பணத்தை, கீழக்கரை மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வந்த இந்த பணத்தை, கீழக்கரையின் தெருவெங்கும் இருள் போக்கி ஒளி வீச வந்த இந்த பணத்தை, இப்படி ஒட்டுமொத்தமாக கீழக்கரையை செழிப்பாக்க வந்த இந்த பணத்தை, ஒட்டுமொத்தமாக, வெளிப்படையாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த அருமையான மக்கள் பணத்தை, ஊழலுக்கு துணை போகாமல் உருப்படியாக செலவிட்டிருந்தால் நம் கீழக்கரை எவ்வளவு செழிப்பானதாக மாறியிருக்கும். சற்று நிதானித்து யோசனை செய்து பார்க்கும் போது மனம் உண்மையில் குமுறத் தான் செய்கிறது இளையவனே..

    கீழக்கரை நகராட்சி அங்கத்தினர்களே நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள். எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ், நாளை மஹ்ஷர் மைதானத்திலே, கேள்விக் கணக்கு கேட்கும் அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே, நிச்சயமாக உங்கள் 'சாதனை மலர்' குறித்தும், நீங்கள் அடித்த கொள்ளைகள் குறித்தும் தீர்க்கமாக விசாரிக்கப்படுவீர்கள் எ
    ன்பதை மறந்து விட்டீர்களா..?
    3 hours ago · Like · 2
  • Abu Siddique Panam vilungum muthalaigalal nadathapadum admin kli. Ethirthu ketpavargaluku arrest warrant arajagam, attuliyam... Innum pala..
    2 hours ago · Like · 1
  • Segu Sathaku Ibrahim கீழக்கரையில் சரியான முறையில் நகராட்சியின் நிதியை பயன் படுத்தி வேலை செய்தால் 
    போதும் ஊர் செழிப்பு ஆகிவிடும் ,இப்போது மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் 
    அவர்களிடம் வீட்டு வரி கேட்டு வருபவர்களிடம் வரி வாங்குகிறீர்கள் எங்களுக்கு ஏன் 
    அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை என்று கேள்வி கேட்க வேண்டும் .
    2 hours ago · Like · 3
  • Segu Sathaku Ibrahim ஏன் என்றால் கேபிள் டிவி வேலை செய்யவில்லை என்றால் எப்படி கத்துகிறோமே ,அது போல் நகராட்சியில் வேலை செய்ய வில்லை என்றாலும் கேட்க நமக்கு ஏன் துணிவு இல்லை .
    2 hours ago · Like · 2
  • Meeran Musthan Yenna saaditirgal publicity pannura alavukku. Nothing
    2 hours ago via mobile · Like · 1
  • Abu Siddique Vethanai Malar.
    2 hours ago · Like · 1
  • கீழை ரோஜா கீழக்கரையில் எங்கே சாதனை நடந்திருக்கிறது. எந்த தெருவில் சுகாதாரம் இருக்கிறது. மீண்டும் டெங்கு காய்ச்சல் தான் நிறைய பேருக்கு இருக்குது. இது நிச்சயமாக வேதனை மலர் தான்
    2 hours ago · Like · 1

    • Keelakarai Ali Batcha காரணம் ஆளுகின்ற அரசின் கேடு கெட்ட சட்ட நடைமுறைகள் தான். மக்களின் வரிப் பணத்தில் மக்கஊக்கு சேவை செய்ய சம்பளம் பெறுபவனை நீதமாக கடமையை செய் என கேட்ட நாதி அற்ற அரசு நிர்வாகம், தட்டி கேட்கும் பாதிப்புக்கு உள்ளானவனை அரசு ஊழியனை வேலை செய்ய விடாமல் தடுத்தாய் என்று கிரிமினல் வழக்குகளை தொடரும் அவல நிலைமையால் தான்.