தேடல் தொடங்கியதே..

Monday 30 April 2012

கீழக்கரையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி 10 கவுன்சிலர்களின் ஒரு நாள் அடையாள 'உண்ணாவிரத அறிவிப்பு' !

கீழக்கரையில் பத்து கவுன்சிலர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து, கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாகவும், நகராட்சியின் பணிகள் மேம்படவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பிரதான பகுதி ஒன்றில் 02.05.2012 ஆம் தேதி காலை 9 .30 மணி முதல் மாலை 5 மணி வரை (போராட்டப் பகுதி இன்னும் முடிவாக அறிவிக்கப்படவில்லை.) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் 20 ஆவது வார்டு கவுன்சிலர் ஹாஜா நஜிமுதீன் அவர்கள் கூறும் போது "நாங்கள் நல்லது செய்வோம், என்று முழு நம்பிக்கை கொண்டு எங்களுக்கு வாக்களித்து  வெற்றி பெறச் செய்த, மக்கள் நலனை முன்னிறுத்தி தான்.. இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் அனைத்து நிலைகளிலும் காணப்படும் குறைபாடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். பொது மக்களும் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு, தங்களுடைய எதிர்பார்ப்புகளை தமிழக அரசுக்கு உணர்த்த தலை பட வேண்டும்" என்று தெரிவித்தார்.


போராட்டக் குழுவினர் வெளியிட்டுள்ள '10 அம்ச கோரிக்கை' நோட்டீஸ் !

இது குறித்து 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுறாகீம் அவர்கள் கூறுகையில் "கீழக்கரை நகராட்சியில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு எட்டப் படும் வரை, எங்கள் போராட்டம் தொடர்ந்து பல்வேறு ஜனநாயக வழிகளில், சட்டத்திற்குட்பட்டு நடை பெற்றுக் கொண்டே இருக்கும். 

நகராட்சியில் நிரந்தர ஆணையரை நியமிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பொறுப்பிலிருக்கும் உயரதிகாரிகள், பிரச்சனைக்குரிய பகுதிகளை நேரடி ஆய்வுகள் வழமையாக செய்து, நல்ல தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment