தேடல் தொடங்கியதே..

Saturday 29 June 2013

கீழக்கரையில் இளம் வயதில் மார்க்கக் கல்வியை கற்றுத் தேர்ந்த ஆலிம் - வாழ்த்து சொல்லும் தருணமிது !

கீழக்கரையில் இறைவனின் அருள் மணம் பரப்பும் மஸ்ஜிதுகளும், கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்படும் பள்ளிவாயில்களும் நிறைவாக காணப்படுகிறது. அதே நேரம் அந்த பள்ளிகளுக்கு  உயிர் நாடியாகத் திகழும் ஆலிம்களின் எண்ணிக்கை, அவற்றை நிரப்புகின்ற அளவுக்கு போதுமானதாக இல்லாமல் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் ரமலான் மாதம் நெருங்கி வரும் இந்த வேளையில், பள்ளிகளில் இரவுத் தொழுகைகளை நடத்துவதற்கு தகுந்த ஆலீம் பெருமக்கள் கிடைக்காமல், அண்டை மாநிலமான கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து, ஆலிம்களை அழைத்து வரும் நிலையே உள்ளது. 


இந்நிலை நீடித்தால் கீழக்கரை நகரின் இஸ்லாமிய சமூகம், மார்க்க அறிவுப் பஞ்சத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க முடியாததாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. மார்க்கக் கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே செல்வது தான் இதற்கு முக்கியமான காரணமாக ஆகும். இதனை களைய, கீழக்கரை பகுதியிலிருந்து,'ஒரு தெருவுக்கு ஒருவரையாவது' ஆலீம்களாக்க மார்க்க அறிஞர்கள், பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். 


இந்நிலையில் கீழக்கரை நடுத்தெருவைச் சேர்ந்த A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி (கீழக்கரை டவுன் காஜி) அவர்களின் மகனார் A.M.K.செய்யது அஹமது நெய்னா அவர்கள் கடந்த 22.06.2013 அன்று சென்னை பெரம்பூரில் உள்ள தாருல் உலூம் ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் 'ஆலிம் ஜமாலி'  பட்டம் பெற்று, கீழக்கரை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவர் முன்னதாக சென்னை பல்கலை கழகத்தில் இருந்து 'அப்ழலுல் உலமா' பட்டமும் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவர் மிக இளம் வயதிலேயே (13 வயதில்) சென்னை மண்ணடி மாமூர் மஸ்ஜிதில் குர்ஆன் மனனம் செய்யும் ஹாபீஸ் படிப்பில் (3 வருடம்) சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னர் மார்க்க கல்வியை தொடர்ச்சியாக கற்று மவ்லவி பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை தாருல் உலூம் ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று  'ஆலிம் ஜமாலி'  பட்டத்தை பெற்றுள்ளார்.


தற்போது சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பு  M.A., அராபிக் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இவர் 13 வயது முதலே, ரமலான் மாதத்தில், கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில், இரவுத் தொழுகையின் ஒரு பகுதியை, இமாமாக இருந்து தொழுகை நடத்தி வந்துள்ளார் என்பதும்   இவர் 9 வருடங்கள் தொடர்ந்து மார்க்க கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளதும்   குறிப்பிடத்தக்கது.

மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் ஜமாலி  அவர்களின் மார்க்க கல்வி மென் மேலும் சிறப்புறவும், இவர்களை மார்க்க கல்வியில் சேர்த்து ஊக்கப்படுத்திய இவரின் பெற்றோர்கள், குடும்பத்தார்கள், ஆசிரியர்கள், மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

FACE BOOK COMMENTS :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'அல்ஹம்துலில்லாஹ்.. 

    மனதிற்கு மகிழ்வளிக்கும் செய்தி. கீழக்கரை வாழும் இஸ்லாமிய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இது போன்று வீட்டுக்கு ஒருவரை ஆலிமாக்க, இந்த நாளில் உறுதி மொழி எடுக்க வேண்டும். 

    இதற்கு தற்கால முன்னோடியாக விளங்கும், நடுத்தெருவைச் சேர்ந்த சக
    ோதரர் குத்புதீன் ராஜா மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஆகியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்க கல்வி வழங்கி, ஆலீம்களாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். வல்ல நாயன் இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தார்களுக்கும் அதற்கான உயர்ந்த கூலியை நல்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    உலகக் கல்வியை பயின்று வாழ்வில் பணம் சம்பாதிப்பது ஒன்றே முதல் நோக்கமாக கொள்ளும் இந்த காலத்தில், இது போன்று மார்க்க கல்வி பயில, பெற்றோர்கள் ஊக்கமளித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது.
    4 hours ago · Like · 2
  • Keelakarai Jamath மவ்லவி. அப்ழலுல் உலமா. ஹாபிஸ். செய்யது அஹமது நெய்னா சித்தீகி ஆலிம் அவர்களை கீழை இளையவனுடன் சேர்ந்து நெஞ்சார வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

    அவர்களின் முத்து வாப்பா (முன்னாள் டவுன் காஜி)மற்றும் வாப்பா (இன்னாள் டவுன் காஜி) வழியில் நின்று பேரும் புகழும் அடைய வல்ல ரஹ்மான் நல் அருள் புரிய இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம். ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆல்மீன்.
    4 hours ago via mobile · Like · 2

Thursday 27 June 2013

கீழக்கரையில் பழமையை தாங்கி, கம்பீரமாக காட்சி தரும் கட்டிடங்கள் - வரலாற்றுச் சுவடுகள் (பகுதி 1)

கீழக்கரையில் மிக வேகமாக உருவெடுத்து வரும் நகராக்கத்தின் தாக்கத்தால், பழமை மிளிரும் பல வீடுகளை இடித்து விட்டு, நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டுவதில் மக்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இதனால் பழமைகளை தாங்கி நிற்கும் வீடுகள் எல்லாம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. கீழக்கரை நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பழைமைகளை தாங்கி, கம்பீரமாக காட்சியளிக்கும் கட்டிடங்களும், வீடுகளும், வியாபாரத் தளங்களும் இன்னும் 15 வருடங்களுக்குள் முற்றிலுமாக காணாமல் போய் விடும் நிலையே உள்ளது. 






இடம் : பழைய மீன் கடை, சேரான் தெரு, கீழக்கரை 

பட விளக்கம் : கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட, இந்த மீன் சந்தை கட்டிடம் 120 வருடங்கள் பழமையானது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் (கொளுக்கி ஓடுகள்) கொழும்பு ஓடுகள் அததனையும், இன்னும் எவ்வித சிதிலமும் அடையாமல்  புதிததாக பொருத்தப்பட்ட ஓடுகள் போல் மிளிர்வதை காணலாம்.

கீழக்கரையில் மிகவும் தொன்மையான வரலாற்றுடன் காட்சி தரும் பழைமை கட்டிடங்கள் பெரும்பாலும் பழைய குத்பா பள்ளி தெரு, பரதர் தெரு, பெத்தரி தெரு, சேரான் தெரு, நடுத் தெரு, கிழக்குத் தெரு பகுதிகளில் இருக்கிறது.அவற்றுள் பெரும்பாலானவை பராமரிக்கப்படாமல், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது போன்ற கட்டிடங்கள் கீழக்கரை நகரின் பண்டைய கலாச்சாரத்தை பறை சாற்றும் வரலாற்று சின்னங்களாக இருக்கிறது.


இடம் : கஸ்டம்ஸ் சாலை, பெத்தரி தெரு, கீழக்கரை 

நம் கீழக்கரையின், எதிர் கால சந்ததியினர் இது போன்ற பழமையான கட்டிடங்களை காண ஆவல் கொள்ளும் காலத்தில், இவை புகைப்படமாகவாவது, நம் கைகளில் தவழட்டும் என்கிற பேராவலில் இவற்றை வெளியிட முனைகிறேன். இதன் தொடர்ச்சியாக வரும் பதிவுகளில் பழமையான கட்டிடங்களின் வரலாறுகள், வடிவமைப்புகள், கடந்து வந்த பாதைகள் குறித்து விரிவாக பதிகிறேன்.

பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!

FACE BOOK COMMENTS :

  • Fouz Ameen கீழை இளையவனே கலக்குரிய மச்சான். போட்டோஸ் பாத்து, இது என்ன இடம்னு கண்டு பிடிக்கலே. செய்தி படிச்சி தான் தெரிஞ்சிகிட்டேன். இன்னும் நெறைய போட்டோ அப்டேட் போடு மச்சான்.
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஆஹா அருமை.. மாசா அல்லாஹ். கீழக்கரையின் பழைமையான கட்டிடங்களை இது போன்று யாராவது சமூக ஆர்வலர்கள் புகைப்படமாக தந்தால் மட்டமே, வருங்கால சந்ததியினர், சரித்திரங்களை தெரிந்து கொள்ள முடியும். இது போன்ற வரலாற்று பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் தம்பி இளையவரே. ஆர்வம் மேலிடுகிறது.
  • Keelakarai Ali Batcha தம்பி கீழை இளையவனே, கடந்த ஆண்டு இறுதியில் சரித்திர ஆர்வலர் நமதூர் தம்பி அபு சாலிஹ் சீனி அசனா அவர்களுடன் பழைமையான எனது வீட்டிற்கு வருகை தந்து ஆய்வு செய்தது ஜப்பானிய சரித்திர மாணவர் குழு.தாங்களும் ஒரு முறை வருகை தந்து பழங்கால பித்தளை வட்டா, மர பல்லாங்குழி போன்ற மற்றவைகளையும் கண்டு களியுங்களேன்.

  • Keelai Ilayyavan அன்புள்ள அலி பாட்சா காக்கா, 


    தங்களின் அழைப்பிற்கு நன்றி. நானும் உங்கள் இல்லத்திற்கு வருகை தர பேராவல் கொண்டு காத்திருக்கிறேன்.
  • Abdul Hameed Ramnad இது போன்ற நமது ஊருக்கென்றே சொல்லப்படும் பல்வேறு பழமைகளையும் கலாச்சாரங்களையும் பாதுகாத்து நமது ஊர் பெருமையை வருங்கால நமத சந்ததிகளுக்கு சொல்ல நாம் கடமை பட்டுள்ளோம் .
    June 27 at 9:52pm via mobile · Unlike · 4
  • Syed Abusalique Seeni Asana @ Keelakarai Ali Batcha mama - பத்து நாள் முன்னாடி 3 முக்கியமான நபர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து வர விரும்பினேன் அவர்களும் விரும்பினார்கள் வருவதற்கு. அனால் காலம் சற்று குறைவான காரணத்தினால் ஒரு சில இடங்களை மட்டும் பார்த்து விட்டு 2 முக்கியஸ்தர்கள் செனனை செல்ல வேண்டி ஆகிற்று. மீண்டும் அவர்கள் நோன்பு காலங்களில் வருவதகவும் கண்டிபஹா உங்கள் வீட்டை பார்வை இட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து சென்றார்கள்.. நான் கண்டிப்பாக அழைத்து வருவேன். Insha allah.. ஜப்பானியர்களுடன் வரும்போது தாங்கள் நமது ஊர் சுவை மிகுந்த தின்பண்டங்களை வைத்து அசதிநீர்கள்.. பழமைக்கு (அம்பாலர் காலத்து வீடுகள்) ஒரு முக்கிய அங்கமாகவும் கண்கவர் தேக்கு மரங்களால் ஆனா அதிக வேளைபடுகளுடன் கட்ட பட்ட உங்கள் வீட்டை பார்த்து மெய்மரந்து போனார்கள் என்றல் தவறு இல்லை.. 2 நாட்கள் உங்கள் வீட்டை ஆய்வு செய்து அதனை ஒரு மாடல் வடிவில் ஜப்பணில் அமைத்து காட்டவேண்டும் என்றும் விரும்பினார்கள். தங்கள் வீட்டில் உள்ள பொக்கிசங்களை நன் மட்டும் பார்த்தல் போதுமா? தங்கள் வீட்டில் உள்ள பழமையான பொருட்கள், பழைய போட்டோக்கள் அதனை தங்கள் முறையாக பராமரிக்கும் முறை அனைத்தும் சூப்பர்.. 3அம் நபர் கண்டிப்பக வருவர் என்பதில் ஐயம் இல்லை.. @ 3ஆம் நபர் - வருவார் தானே ?
  • Syed Abusalique Seeni Asana கீழை இளையவன் அதிகம் அதிகம் சமூக அக்கறை கொண்டவராகவும்.. பிற்கால சமூகத்தின் நிலைமையை எண்ணி அவர்களுக்கு என்று கஷ்டப்பட்டு பல இடங்கள் ஏரி எறங்கி போடோஸ் எடுத்து இணையத்தில் பதிவு செய்து வருகிறார். ஒவ்வொரு போடோஸ் பின்னாடி எவ்வலவு அலட்ச்சல்களை அவர் சந்தித்து இருப்பர் என்பதை என்னால் உணர முடிகிறது.. கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு என்று மட்டும் இல்லாமல் விஞானம், அறிவியல், மருத்துவம், சட்டம் ஏன் அணைத்து துறைகளையும் அலசி அறைந்து பதிவுகளை தரும் நமது கீழை இளையவன்க்கும் , அவரின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.
  • Nazir Sultan Thambi include our vadakku theru (North street) in your list where there is a house belongs to PKS family near ration shop, which is elegantly showing our forefathers’ expertise on construction

கீழக்கரையில் மூதாட்டியை 'காணவில்லை'- தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டுகோள் !

கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் வசிக்கும் காலம் சென்ற மர்ஹூம். முஹம்மது இபுனு அவர்களின் மனைவி,  'முத்து ஆமினா உம்மாள்' (வயது 70) அவர்களை இன்று அதிகாலை முதல் காணவில்லை. 


காணாமல் போன சமயம் பச்சை நிறத்தில் கைலியும், மஞ்சள் நிற சட்டையும், ஆரஞ்சு நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தார். கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தான் இவர்களுடைய கணவர் வபாத்தானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி காணாமல் போயுள்ளது குடும்பத்தார்களை கடும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியுள்ளது. 

இது குறித்து கீழக்கரை காவல் துறையினரிடமும், கண்டுபிடித்து தருமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. காணமல் போனவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக கீழ் காணும் அலைப்பேசி எண்ணுக்கு தகவல் தருமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரை காவல் நிலையம் - 04567 241272
கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (இஸ்மாயில்) - 90034 35377
மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் (சாலிஹ் ஹுசைன்) - 9791742074

  • Keelai Ilayyavan இறைவன் அருளால், சற்று முன்னர், முத்து ஆமினா உம்மாள் அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியும், காணாமல் போன தகவலை பகிர்ந்தும் கொண்ட முக நூல் நண்பர்கள் அனைவருக்கும், முத்து ஆமினா உம்மாள் அவர்களின் குடும்பத்தார்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.