தேடல் தொடங்கியதே..

Saturday 11 February 2012

'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை' புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் - பொது மக்கள் மகிழ்ச்சி

நம் கீழக்கரை நகரில் தற்போது ஆம்புலன்ஸ் தேவையின் அவசியப்பாடு அதிகரித்து வருகிறது. இங்கு ஆம்புலன்ஸ் வசதிகள் மிக அரிதாகிவிட்ட காரணத்தால், திடீர் விபத்துக்களில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல், வழியிலேயே இறந்து விடும் பரிதாப நிலையே இருந்து வருகிறது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் முதியவர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, மூச்சித்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, முதலுதவி செய்து, உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல இந்த ஆம்புலன்ஸ் வசதி அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.


அறக்கட்டளை தலைவர். ஆசிக் அவர்கள், வாங்கப்பட்ட ஆம்புலன்சுடன்..


தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயலாற்றி வந்தாலும் கூட, அதன் நிறுத்த தடம் இராமநாதபுரமாக இருப்பதால், நாம் இங்கிருந்து தொலைபேசியில் அழைத்து, அவர்கள் கீழக்கரைக்கு வந்து சேர 1 மணி நேரம் எடுக்கிறது. இந்த அசௌகரியங்களை களைய, நம் கீழக்கரையில், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால், புதிய ஆம்புலன்ஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கிழக்குத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ்

 


இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையின் பொருளாலர் அமான் அவர்கள் கூறுகையில் "இறைவனுடைய மாபெரும் கருணையால், எங்களுடைய கிழக்குத்தெரு நண்பர்கள் குழுவால், ஏழை எளிய மக்களுக்கு உதவும் மருத்துவ சேவையை முக்கிய நோக்கமாக கொண்டு சென்ற 01.01.2012 அன்று கீழக்கரை கிழக்குத் தெருவில் ஆரம்பித்தோம். கிழக்கு முஸ்லீம் அறக்கட்டளை என்ற பெயரில் துவங்கிய நம் அறக்கட்டளை 'கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை'  என்று மாற்றம் செய்து, தற்போது சுறு சுறுப்போடு  பணிகளை துவங்கியுள்ளோம்.

நாம் இது குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி

அதன் முதல் கட்டமாக இன்று முதல் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி உள்ளோம். நம் கீழக்கரை நகரின் பொது மக்கள் அனைவரும் இந்த சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ள எதுவாக, மிகுந்த விழிப்போடு இந்த இன்றியமையாத சேவையை செயல்படுத்த காத்திருக்கிறோம்." என்று உற்சாகத்துடன்  தெரிவித்தார்.


அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு, அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள்

இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை ! நம் கீழக்கரை நகருக்கு அவசியம் தேவை !! கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால்,  இந்த ஆம்புலன்ஸ் சேவை தகுந்த நேரத்தில், அனைத்து மக்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டு இருப்பது, பொது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Wednesday 8 February 2012

கீழக்கரையில் நடந்த 'புதிய மருத்துவ காப்பீட்டு' திட்டத்தின் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

கீழக்கரையில் இன்று (08.02.2012) கிழக்குத்தெருவிலுள்ள கைராத்துல் ஜலாலியா பழைய பள்ளிக் கட்டிடத்தில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடை பெற்றது.






இந்த மருத்துவ முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இராமநாதபுரம் கனகமணி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை அளித்தனர். ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளும், புதிய காப்பீட்டு திட்டமான, முதலமைச்சர் மருத்துவ திட்டத்தின் மூலம் பயன் பெறும் வழி முறைகளையும் கேட்டறிந்தனர்.






இது குறித்து மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த முஹம்மது இபுராஹீம் அவர்கள் கூறுகையில், "இந்த மருத்துவ முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இங்கு எனக்கு E.C.G, இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு நல்ல மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்தான பிறகு, அதை விட சிறப்பான திட்டங்களுடன், இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயலாற்ற முனைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும், இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி தலைவி ராவியத்துல் கதரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.







கட‌ந்த ‌தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் இந்த புதிய திட்டத்தில் நீக்கப்பட்டு உள்ளன. முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில 1.50 லட்சம் ரூபாய் ரூபாய் வரை வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகப்பட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவினை பெற இயலும்.




முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து, இந்த புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படுகிறது.

புதிய முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஹசீன் அவர்களை 8012266677 என்ற எண்ணிலோ அல்லது மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்களை 9444463923 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு கேட்கலாம். 

Sunday 5 February 2012

கீழக்கரை எழில் பெறுமா... மீண்டும் ? - காணொளி (வீடியோ ) காட்சி !

கீழக்கரையை குப்பைகள் இல்லாத நகராக மாற்ற எடுத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஹமது லாபீர் அவர்கள் , இந்த குப்பையினால் நம் எழில் கொஞ்சும் கடற்கரை நகரம், எந்த அளவிற்கு தன் பொலிவை இழந்துள்ளது என்பதை, மிகுந்த அக்கறையோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார்.


PART - 1

                                            
கீழக்கரை வாழ் சகோதர, சகோதரிகள் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது, இந்த காணொளியை (வீடியோ காட்சிகளை) பார்க்க வேண்டும். இந்த காணொளியை கண்ட பிறகு நிச்சயம் உங்களுக்குள் நல்ல ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.