தேடல் தொடங்கியதே..

Wednesday 11 September 2013

கீழக்கரையில் நாளை (12.09.2013) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு !

கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (12.09.2013) வியாழக் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி   மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை 'மின் விநியோகம் இருக்காது' என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் திரு .கங்காதரன் தெரிவித்துள்ளார். 


ஆகவே நாளைய தினம் ஏற்பட இருக்கும் நீண்ட நேர மின் வெட்டினை  சமாளிக்க, பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. கீழகரைல் ஆனைத்து தெரு விளக்கும் மின் மற்றும் சூரியன் மின் சக்தில் இயக்க கூடியதாக அமைக்க பட வேண்டும் ,கரண்ட் இல்லாத நேரத்தில் குழந்தைகள், முதிவர்கள் , பெண்கள் இரவில் பயம் இன்றி ரோட்டில் நடபதர்க்கு உதவியாக இருக்கும் ,இதற்க்கு மக்கள் நலம் கருதும் அமைப்புகள் குரல் கொடுக்க முன் வர வேண்டும்

    ReplyDelete