தேடல் தொடங்கியதே..

Wednesday 11 April 2012

கீழக்கரையில் சுனாமி எச்சரிக்கை - மக்கள் பீதி அடைய வேண்டாமென அறிவிப்பு !

இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவை மையம் கொண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  8.9 அளவாக பதிவானது. இதையடுத்து த‌மிழ‌க்த்தின் க‌ட‌லோர‌ மாவட்ட‌ங்க‌ளில் க‌ட‌ற்கையோர‌மாக‌ குடியிருப்ப‌வ‌ர்க‌ள் பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளுக்கு செல்லுமாறு தொடர்ந்து காவல் துறையினரால் அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்த வண்ணம் இருக்கிறது.


கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ள காட்சி. (நேரம் : மாலை 5 மணி)

குறைவான அலைகளுடன் கடற்கரை

இந்நிலையில் கீழக்கரை பகுதியிலும் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை பள்ளிகளுடைய ஜமாத்தினரும், பல்வேறு பொது நல அமைப்பினரும் இரவு 7 மணி வரை ஆட்டோவில் அறிவிப்புகள் செய்த வண்ணம் இருந்தனர். கடற்கரை பாலத்திற்கும், கடலிக்கு மிக அருகாமையிலும் யாரும் செல்ல வேண்டாமென காவல் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். 


பீதியான மக்கள் கூட்டத்தில், புதிய கடல் பாலம் !


தொடர்ந்து கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம் !

இருப்பினும், புதிய கடல் பாலம் பகுதியில் மாலை 5 மணி முதல் பொது மக்கள் திரளாக வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்ல அனுமதி தர மறுத்தனர். மாலை 6 மணி வரை கடல் சீற்றம் ஏதுமின்றி, அலைக‌ள் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் மட்டம் சற்று உயர்ந்து காணப்பட்டது. 


மீன்பிடி படகுகளை அவசரமாக கரையேற்றும் மீனவர்கள் !

கயிறு கட்டப்பட்டிருக்கும் காட்சி (நேரம் இரவு : 8 மணி)

இந்நிலையில் தமிழகத்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக தேசிய பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து கீழக்கரையிலும் சுனாமி குறித்து யாரும் பீதி அடைய வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் !

 மூடப்பட்டிருக்கும் புதிய பாலத்தின் நுழைவு வாயில் ! (நேரம் : இரவு 8 மணி)


கீழக்கரை புதிய மற்றும் பழைய கடல் பாலத்திற்கு, பொதுமக்கள் செல்லாத வண்ணம், தடுப்புக் கயிறு கட்டப்பட்டு, இன்று இரவு 7 மணி முதல் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இறைவன் அருளால் நம் கீழக்கரை நகர் முழுவதும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

சகலவிதமான இயற்கை சீற்றங்களிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக.. ஆமீன்

2 comments: