தேடல் தொடங்கியதே..

Monday 3 June 2013

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறை படுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர், மின்சார வாரியத்திற்கு SDPI கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் !

கீழக்கரையில் தற்போது மின்சார கட்டண வசூல் மையம், நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் வண்ணாந்துறை அருகே செயல்பட்டு வருகிறது. அதனை ஊருக்குள் கொண்டு வர கீழக்கரையின் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பொதுநல வாதிகளும்  பெரு முயற்சி எடுத்து வந்தனர்.



இந்த தொடர் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த நகராட்சி நிர்வாகத்தினர், புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் நலன் கருதி மின்சார கட்டணம் கட்டும் அலுவலகம் செயல்படுத்த ஏற்கனவே இருந்த ஒரு அறையை புதுப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்து விட்டது. "இதற்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 1,97,812 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ. 50000 (ஐம்பதாயிரம்) கூட இருக்காது" என்று கவுன்சிலர் M.U.V.முகைதீன் இப்ராகீம் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், புதிய பேருந்து நிலையத்தில், கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும், மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகம் இன்றைய தேதி வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் கீழக்கரை நகர் சோஷியல் டெமொக்ரெடிக் பார்ட்டி (SDPI) கட்சியினர் கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறைபடுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

குறிப்பு: கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதியதாக பொறுப்பேற்ற நகர் மன்ற அங்கத்தினர்களின் முத‌ல் கூட்ட‌த்தில், முதன்மை  தீர்மானமாக, கீழக்கரை நகருக்குள் மின்சார கட்டணம் செலுத்தும் மையத்தை கொண்டு வர வேண்டும் என்பதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அரசியல் இலாபங்களுக்காக கிடப்பில் போடப்பட்டு இருக்கும் இந்த மின்சார வசூல் மையத்தை துரிதமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது.

No comments:

Post a Comment