தேடல் தொடங்கியதே..

Sunday 13 October 2013

கீழக்கரை 'மணல்மேடு' கண்காட்சி திடலில் வருடம் தோறும் கேள்விக் குறியாகும் சுகாதாரம், பாதுகாப்பு - சம்பந்தப்பட்ட ஜமாத்தார்கள் சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் மேற்பார்வையில் ஒவ்வொரு வருடமும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரும் முதல் மூன்று தினங்களுக்கு வடக்குத் தெரு பகுதியில் அமைந்திருக்கும் மணல் மேட்டில் 'கண்காட்சித் திடல்' அமைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கு முறையாக சுத்தம் சுகாதாரம் பேணப் படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


படம் : கடந்த நோன்பு பெருநாள் சமயத்தில் எடுக்கப்பட்டது 

இது குறித்து நாம் ஏற்கனவே கடந்த நோன்பு பெருநாள் சமயத்தில் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.


மேலும் இந்த கண்காட்சி திடலில், சரியான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாளிலாவது சம்பந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகம் பின்வருவனவற்றை செய்து தரவேண்டும் என கீழக்கரை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து சமூக ஆர்வலர். சேகு சதக் இப்ராஹிம் அவர்கள் கூறியதாவது,

பல ஆண்டுகளாக பெருநாள் தினங்களில் கீழக்கரை மணல்மேடு பொருட்காட்சியில் செய்ய தவறிய நடவடிக்கைகள்

1. குப்பைகளை தினமும் சுத்தம் செய்யாதது.

2. அதிக ஹோட்டல்கள் வரிசையாக உள்ளது இதில் காஸ் சிலிண்டர் அதிகமாக பயன்படுகிறது இதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது ,(தீ அணைப்பு வண்டி இல்லாதது )

3. மருத்துவர் குழு மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாதது.

4. இரவு 10 மணிக்கு மேல் நடத்துவது இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து.

5. உள்ளே உள்ள அனைத்து பொருட்களும் அநியாய விலையில் உள்ளது இதை சரி செய்ய தவறியது.

6. விளையாட்டு ஊஞ்சல்களுக்கு பாதுகாப்பு சோதனை ஓட்ட சான்றிதழ் இல்லாதது.

7. ஆண்கள், பெண்களுக்கு என தனி தனி கழிப்பிட வசதி இல்லாதது

8. வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தாமல் இருப்பது .

இது போன்று எவ்வித அம்சங்களும் இல்லாமல் இருக்கும் போது விபத்து நடந்தால் யார் பொறுப்பு...? இந்த விசயங்களை சரி செய்ய தனியார் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.. ?

நமது மாவட்டத்தில் நடக்கும் பெரிய பொருட்காட்சி இது தான். இங்கு நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பொதுமக்கள் வருகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி ஆகியவை பொருட்காட்சி நடத்தும் தனியார் நிர்வாகத்துடன் இணைந்து மேற்கூறிய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து கீழக்கரை. இஸ்மாயில் மரிக்கா அவர்கள் கூறும் போது "நமது ஊரில் இன்று நேற்று அல்ல.. ஆண்டாண்டு காலமாக இது போன்று பாதுகாப்பற்று தான் நடை பெற்று வருகிறது . சில வருடங்களாக அது மிக மோசமாக நடைபெற்று வருவதை நாம் அறிய முடிகிறது . இது நாம ஊருக்கு தேவையா தேவையற்றதா என்பது குறித்து இரு கருத்துகள் இருக்கிறது .

1.தினமும் பொருள் காட்சியில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.இது தனிப்பட்ட ஜமாத்தால் நடத்தபடுகிறது. அவர்கள் அதற்கு என்று தனியாக சில பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியார்களையும் சுத்தம் செய்ய அழைக்கலாம் . 

2.அதிக ஹோட்டல் இருகிறது. விபத்து நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. கண்டிப்பாக பொருள் காட்சியே ஏற்று நடத்தும் ஜமாத் தீயணைப்பு துறைக்கு மற்றும் நகராட்சிக்கு மனு கொடுக்கலாம். விபத்துகள் தவிர்க்கப்படும் 

3. மருத்துவர் குழு மற்றும் ஆம்புலன்ஸ் த.மு.மு .க மற்றும் எஸ் டி பி ஐ மற்றும் சில இயக்கங்கள் அரசு ஆம்புலன்ஸ் இருக்கிறது. அவர்களிடம் மனுக்கள் கொடுத்து தயார் நிலையில் இருக்க செய்யலாம் .

4.இரவு 10 மணிக்கு மேலே பொருள்காட்சி நடத்தபடுகிறது. இதை சம்மந்த பட்ட ஜமாஅத் சகோதரர்கள் தடை செய்யலாம். முன்பு எல்லாம் ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தற்போது அப்படி இல்லை இது சில பிரச்சனைகளையும் உருவாக்கும் 

5. உள்ளே உள்ள பொருள்கள் அதிக விலை விற்க்கபடுகிறது என்றால் 3 நாள்களுக்கு அதிகமாக கடைகளுக்கு வாடகை வசூல் செய்யபடுகிறது என்றும் கூறபடுகிறது அதை சம்மந்தப்பட்ட ஜமாஅத் சகோதரர்கள் சரி செய்யலாம். விலை வைத்து விற்கும் கடைகளுக்கு அடுத்த முறை கடை கொடுக்கபடாது என்று அறிவிப்பு செய்யலாம்.

6. விளையாட்டு ஊஞ்சல்களுக்கு பாதுகாப்பு சோதனை ஓட்ட சான்றிதழ் அனைத்தையும் பரிசோதனை செய்யப்பட்ட உடன் பொருள்காட்சியில் அனுமதி அளிக்கலாம் 

7. ஆண்கள், பெண்களுக்கு என தனி தனி கழிப்பிட வசதி இல்லாதது தற்காலிகமாக அமைப்பது சற்று சிரமமான ஒன்றாக தான் இருக்கும். வருகிற கூட்டத்திற்கு இந்த கழிப்பிடங்கள் அமைப்பது கடினம் தான். இருப்பினும் அதனை செய்ய நிர்வாகம் முன் வர வேண்டும். 

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது இதை யாராவது மனுவாக மாவட்ட ஆட்சியாளருக்கு கொடுத்தால் இந்த கண் காட்சி திடலுக்கு னுமதி கிடைக்காது என்றே நினைக்கிறன். ஆகவே சம்பந்தப்பட்ட ஜமாத்தார்கள், விரைந்து கவனம் செலுத்தி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment