தேடல் தொடங்கியதே..

Friday 25 May 2012

கீழக்கரையில் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற முகைதீனியா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா !

தமிழகமெங்கும் கடந்த 22 ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் கடந்த வருடங்களை போல பெண்களே அனைத்து பாடங்களிலும் முன்னிலை வகித்தனர். நம் கீழக்கரை நகரிலும் பெண்களே பெருவாரியான பகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்ற வடக்குத் தெருவைச் சேர்ந்த ஹாஜி. சுல்தான் செய்யது  மற்றும் ராசிகா பானு அவர்களின் மகளார். மிஸ்பாஹ் பாத்திமா 1161 மதிப்பெண்கள் பெற்று கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகளில் முத‌லிட‌ம் பெற்று நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.




இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றி பெற்ற மாணவிகளை மென் மேலும் ஊக்கப்படுத்தும் முகமாகவும்  வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு சார்பாகவும், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம்  மற்றும் கீழக்கரை நகராட்சி மன்றம் சார்பாகவும் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்று காலை 10.30  மணியளவில் முஹைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.




இந்த நிகழ்ச்சியில் வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ஜனாப். K.M.S. பசீர் காக்கா  தலைமை வகித்தார்கள். வடக்குத் தெரு ஜமாஅத் கல்விக் குழு உதவி தலைவர் ஜனாப். ரபீக் சாதிக் காக்கா மற்றும் உதவி செயலாளர் M.M.S முகைதீன் இபுறாகீம் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா மற்றும் கவுன்சிலர்கள் அன்வர் அலி, இடி மின்னல் ஹாஜா, அரூசியா பேகம், முகைதீன் இபுறாகீம், சாகுல் ஹமீது, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன், கீழக்கரை காவல் துறை சார்பு ஆய்வாளர் கார் மேகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பள்ளியின் முதல்வர். ரஹ்மத்து நிஷா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர். ஜனாப். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் 'கல்வி மற்றும் IAS ஆட்சிப் பணி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்சிகளை பள்ளியின் துணை முதல்வர் திரு ஜனநாயக சேதுபதி தொகுத்து வழங்கினார்.





மாணவி மிஸ்பாஹ் பாத்திமா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:

தமிழ் : 186     ஆங்கிலம் : 189     கணினி அறிவியல்  : 195     பொருளியல்  : 194

வணிகவியல்  : 198    கணக்குப் பதிவியல்  :  200



பெற்றோருடன் சாதனை மாணவிகள் !

ஆசிரிய பெருந்தகைகளுடன் சாதனை மாணவிகள்

நம் நகரில் முதலிடம் பெற்ற மிஸ்பாஹ் பாத்திமா அவர்கள் கூறுகையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனக்கு  IAS படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் இப்பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களை வென்ற மிஸ்பாஹ் பாத்திமா, மிஸ்பாஹ் ஆயிஷா, முஹம்மது ஹம்சா பாத்திமா ஆகியோர்களுக்கு, கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா, வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் காவல் துறை சார்பு ஆய்வாளர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்


வாழ்த்துக்கள்.... கனவுகள் விதையுங்கள் ! அறிவின் தோட்டத்தில்.. வெற்றியின் அறுவடை தூரமில்லை...

No comments:

Post a Comment