தேடல் தொடங்கியதே..

Thursday 29 December 2011

கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு - பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை.

இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்
இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்

மார்கழி மாதம் ஆரம்பித்ததிலிருந்தே, பனியின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. இதனால் கீழக்கரையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பொது மக்கள் எப்போதும் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

இது குறித்து இராமநாதபுரம் தனியார் பள்ளி ஒன்றில்  பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் மெஹ்மூது ரிபான் அவர்கள் கூறுகையில், "தினமும் கீழக்கரையில் இருந்து 7 மணிக்கே அரசு பேருந்தில் பள்ளிக்கு புறப்படுகிறேன். கடந்த ஒரு வாரமாக காலை 9 வரை பனி மூட்டம் சாலைகள் முழுதும் பரவி கிடக்கிறது.  ஆனால் இது எனக்கு மிக புதிய அனுபவமாக இருக்கிறது. ஊட்டியும், கொடைக்கானாலும் நம் கீழக்கரைக்கே இடம் பெயர்ந்து வந்ததாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்", என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.


இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்
அதே நேரம், இராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் காலை நேரங்களில் சவாரி செல்லும் ஆட்டோ டிரைவர் ரமீஸ் கூறுகையில், "இந்த கடும் பனி பொழிவு காரணமாக ஆட்டோவை ஓட்டி வருவது பெரும் சிரமமாக இருக்கிறது. முகப்பு விளக்குகள் எரிய விட்டு சென்றாலும், காலை 8 மணிக்கு கூட சாலைகள் தெரிவதில்லை. இதனால் பயண நேரம் 30 நிமிடத்திலிருந்து 45 நிமிட  நேரம் ஆகிறது. வேகமாக சென்றால், விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. ஒரு 15 நிமிடம் தாமதமானால் பரவாயில்லை. பயணிகள் பாதுகாப்பு தான் முக்கியம்", என்று தெரிவித்தார்.

இன்று (29 .12 .2011) காலை 8 மணிக்கு எடுத்த புகைப்படம்

குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பனிபொழிவு நேரங்களில் மிகுந்த கவனத்துடனும், முறையாக சாலை விதிகளை பின்பற்றியும் வாகனங்களை ஓட்ட வேண்டும். இது போன்ற பனி பொழிவு காலைகளில், இரு சக்கர வாகன ஓட்டிகள் 100 ல போனா.. 108 பின்னால வரும்... என்பது உறுதி. ஆகவே இது போன்ற நேரங்களில் விழிப்புடன் செயல்பட்டு விபத்துக்களை குறைக்க வேண்டும்.

3 comments:

  1. நம்ம ஊருல இந்த அளவு பனி பேயுதா அப்போ ஊட்டி மாதிரி இருக்குமா

    ReplyDelete