தேடல் தொடங்கியதே..

Friday 30 December 2011

கீழக்கரையில் அநாதை ஆதரவு இல்லங்கள் நடத்தி பணம் கொழுக்கும் ஆசாமிகள் - பகீர் ரிப்போர்ட்



பல நல்ல நோக்கங்களை மனதில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் எத்தனையோ தொண்டு அமைப்புகளும், ஆதரவு இல்லங்களும் இருக்கும் போது, கடந்த சில ஆண்டுகளாக, அநாதை இல்லங்கள் என்ற பெயரில் புதிதாய் முளைத்திருக்கும் இந்த 'அவமானச் சின்னங்களால்' அனைத்து அமைப்புகளின் கண்ணியமும் சீர் குலைந்து வருகிறது. தற்போதைய சூழ் நிலையில் இந்த ஆதரவு  இல்லங்கள் பணம் பண்ணும் புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது. ஆண்டிகளாய் கீழக்கரையில் கால் பதித்த சில ஆசாமிகள், ஆதரவு இல்லங்கள் மூலம், ஐந்தாண்டுகளுக்குள் கோடிகளில் புரண்டு வரும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து கிழக்கு தெருவை சேர்ந்த சகோதரி ஆமினத்து அவர்கள் கூறுகையில், " அனாதைகளின் பண விசயத்தில் நமது மார்க்கம் மிக கண்டிப்பாக  நடக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் மார்க்கத்தை கற்றறிந்த இந்த ஆசாமிகள் துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, வருடத்தில் இரு முறை பறந்து, அங்கு பணி புரியும் நம் நகரவாசிகளிடம், லட்சக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அத்தனையும் ஏப்பம் விட்டு, விட்டு.. பிஞ்சு குழந்தைகளை பசியும், பட்டினியுமாக போட்டு, சரியான உடுமானம் கூட கொடுக்காமல், 'சைக்கோ தண்டனைகள்' கொடுத்ததை நான் கண்ணுற நேர்ந்த போது நெஞ்சே வெடித்து விட்டது. "யாரு பெத்த புள்ளைகளோ.. இங்கே வந்து, பசியும் பட்டினியுமா கெடந்து கஷ்டப்படுது", என்று கண்களின் ஓரமாய் பூத்த கண்ணீரை மறைத்து கொண்டு பேசினார்.

கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் முஹம்மது ஜுல்பி அவர்கள் கூறும் போது, நமது மாவட்டத்தில் எத்தனையோ சிறப்பாக செயல்பட்டு வரும் அநாதை இல்லங்கள் இருக்கும் போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் இது போன்ற 'அடாவடி ஆதரவு இல்லங்கள்' விசயத்தில் உடனடியாக அரசு தலையிட்டு, இவற்றை மூட உத்தரவிட வேண்டும். இது சம்பந்தமாக நாங்களும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகமும் இணைந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும், சம்மந்தப்பட்ட துறையினருக்கும் புகார் அனுப்பி இருக்கிறோம். உள்ளூர் காவல் துறையினர் இவர்கள் மீது எவ்வித இரக்கமும் காட்டாமல், தண்டனை பெற்று தர ஆவண செய்ய வேண்டும்" என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.



இந்த அநாதை இல்லங்களுக்கு 'ஒரு பக்கம் வள்ளல்கள் வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். மற்ற்றொரு பக்கம் இந்த ஆசாமிகள் வாரிச் சுருட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த வள்ளல்கள் வருடம் ஒரு முறை ஊர் வரும் போதாவது, மறக்காமல் நேரம் ஒதுக்கி, சம்பந்தப்பட்ட ஆதரவு இல்லங்களை நேரடி ஆய்வு செய்ய வேண்டும். தங்களால் வழங்கப்பட்ட கொடைகள், முறையாக செலவு செய்யப் பட்டதா ? அல்லது ஏப்பம் விடப்பட்டதா ? என கண்காணிக்க வேண்டும்.

வெளி நாடுகளில் ஓடாய் தேய்ந்து உழைக்கும் நம் சொந்தங்கள், அநாதை இல்லங்களை புகைப்படத்தில் காட்டி யாராவது பணம் கேட்டால், அது ஒரு பைசாவாக இருந்தாலும் சரி.. உடனே வாரி வழங்கி விடாமல், விபரம் அறிந்த உள்ளூர் வாசிகளிடம் நன்றாக விசாரித்து விட்டு கொடுப்பது நல்லது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். ஒரு முறை ஏமாறுபவன் தான் மனிதன்.. மறுமுறை ஏமாறுபவன் முட்டாள்... விழிப்புடன் இருப்போம். விழிப்புணர்வு பெறுவோம் ..

3 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
    கீழக்கரையில் நடந்துகொண்டு இருக்கும் இது போன்ற மோசமான சம்பவங்களால் உண்மையான ஆலிம் களுக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது... ...நமது ஊரில் புதிதாக உருவாகி இருக்கும் "ஆதரவற்ற இல்லங்களுக்கு" அரசின் முறையான அனுமதிகூட கிடையாது...இது போன்ற ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவர்களுக்கு சரியான உணவு,உடை,சுகாதாரம் போன்ற எதுவுமே முறையாக கிடைப்பது இல்லை...இப்படி இருக்கையில் நமது ஊர் வள்ளல்கள் இது போன்ற இல்லங்களுக்கு பணத்தை வாரி இறைத்து கொண்டு இருகின்றனர்...மேலும் இந்த ஆதரவற்ற இல்லத்தை நடத்தி வருபவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமான வீடு,சொந்த ஊர்களில் மனைவி பெயரிலோ அல்லது தன்னுடைய பெயரிலோ நிலங்கள் என்று செல்வ செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள்...இது மட்டுமா பரம்பரை பணக்காரர்களை மிஞ்சும் வகையில் கார்கள்,பைக்குகள்...நமது ஊர் மக்களுக்கு தெரியும் நமது ஊருக்கு வரும் ஆலிம் மார்கள் மாதம் மூன்றாயிரம் ருபாய் சம்பளத்தில் இது போன்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது கிடையாது.நாமும் அப்படிபட்ட ஆலிம்களை பார்த்தும் இருக்கிறோம்.ஆனால் திடீரென்று வெளி ஊரில் இருந்து ஓதி கொடுக்க வந்தவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
    வெளிநாடு வாழ் நம் நகர வாசிகளே சில நாட்களுக்கு முனனால் கீழக்கரையில் ஒரு மதரசாவில் ஒரு சிறுவனுக்கு தண்டனை என்ற பெயரில் "வன்கொடுமை" சம்பவம் நடந்தது எல்லோருக்கும் தெரியும்.அந்த விஷயம் வெளியில் வராமல் இருப்பதற்கு பல லட்சங்களை அந்த ஆலிம் வாரி இறைத்து உள்ளார்...இந்த பணமெல்லாம் யார் பணம் ?
    உங்களுடைய பணம்..ஆம் நீங்கள் வெளிநாடுகளில் கஷ்ட்டபட்டு ரத்தம் சிந்தி உழைத்த பணம்...ஆதரவற்ற குழந்தைகளுக்குகென்று நீங்கள் மனதார கொடுத்த பணம்...ஆனால் அங்கே வசூல் வேட்டை நடதியவரோ இங்கு தான் சம்பாதித்தது போன்று மிக பிரமாண்டமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்...
    வெளிநாடு வாழ் சகோதரர்களே இவர் போன்ற ஆசாமிகளின் பேச்சை நம்பி மறுபடியும் ஏமாறாமல் கவனமாக இருங்கள்...

    ReplyDelete
  2. all middle class people know about this n not giving fund 2 them, all higher class people paticularilly in abord giving fund 2 them, pls beware of this people n protect ur money,n when u giving money 2 this people, pls verfiy their profile n give, dont give it bilndily, "UR MONEY IS UR BLOOD"

    ReplyDelete