தேடல் தொடங்கியதே..

Tuesday 20 March 2012

கீழக்கரையில் குப்பை கொட்டும் தளத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகள் தீவிரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி !

நம் கீழக்கரை நகரில் முதன்மை பிரச்சனையாக குப்பைகள் பிரச்சனைகள் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த   பல்வேறு அமைப்புகளும், நகர் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும், கீழக்கரை நகராட்சியின் ஒத்துழைப்போடு தீவிர முயற்சிகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.


முழு வீச்சில் கட்டப்பட்டுள்ள குப்பை கிடங்கின் பில்லர்கள்

நேற்று  (24.03.2012) எடுக்கப்பட்ட புகைப்படம்

துரிதமான வேலைகளின் பிரதிபலிப்பு

நேற்று (24.03.2012) எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த முயற்சிகளின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமைய இருக்கும் குப்பைகள் கொட்டும் தளத்திற்கான சுற்றுச் சுவர் கட்டும் பணி தற்போது கீழக்கரை நகராட்சியின் மேற்பார்வையில் நடை பெற்று வருகிறது. இந்த கட்டுமானம் நடை பெறும் இடத்திற்கு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக நேரடி விசிட் அடித்தோம். அங்கு பணிகள் விரைவாக நடை பெற்று வருவதை காண முடிந்தது.

குப்பை கொட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர்

இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது "பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு, தற்போது தில்லையேந்தல் பகுதியில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சுற்றுச் சுவர் கட்டும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தும் வகையிலும், தரமான முறையில் வேலைகள் நடை பெறுவதை உறுதி செய்யும் நோக்கோடும் இரண்டு நாளுக்கொரு முறை நேரடி ஆய்வு செய்து வருகிறோம்.

கட்டுமானப் பணிகளை பார்வையிட வந்திருந்த கவுன்சிலர்கள்

தற்போது நம் நகரில் சேரும் குப்பைகள் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இறைவன் நாடினால் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள், சுற்றுச் சுவர் முழுவதும் கட்டப்பட்டு, குப்பைகள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். எனவே பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு  தர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

குப்பை கொட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர்

குப்பை கொட்டும் தளத்திற்கு சுற்றுச் சுவர் கட்டுவதோடு நின்று விடாமல் குப்பைகளை மேலாண்மை செய்யும் தொழில் நுட்பங்களை (WASTE MANAGEMENT SYSTEM) கையாள்வதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தி, குப்பைகள் மலை போல் குவியாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ள ஆக்கப் பூர்வ எதிர் கால திட்டங்களை கையாள வேண்டும் என்பது தான் அனைத்து பொது மக்களின் விருப்பமும், ஆசையும்....

No comments:

Post a Comment