தேடல் தொடங்கியதே..

Monday 26 March 2012

கீழக்கரையில் மீண்டும் கிணறுகளில் விடப்படும் 'கம்பூசியா மீன்கள்' - மலேரியா ஒழிப்பு நடவடிக்கையால் பொது மக்கள் ஆறுதல் !

கீழக்கரையில் மலேரியா மற்றும் விஷ காய்ச்சலால் தற்போது பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பெய்த சிறு மழையின் காரணமாகவும் கொசுக்களின் உற்பத்தி பெருகி விட்டது. கடந்தாண்டு வீடுகள் தோறும் கிணறுகளில் மலேரியா கொசு ஒழிப்புக்கான "கம்பூசியா' என்ற மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் பெரும்பாலான வீடுகளில் செத்து விட்டன. மீண்டும் இந்தப் பணி செயல்படுத்தப்படுவதால் பொது மக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.


கம்பூசியா மீன்கள் உள்ள வாளியுடன் ஊழியர்கள் 


இது குறித்து நெய்னா முகம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹாமீது இபுறாகீம் அவர்கள் கூறும் போது  "இந்த வகை மீன்கள் வீடுகளின் கிணறுகளில் விடப்பட்டிருந்த காலக் கட்டத்தில் மலேரியா காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.


மலேரியா கொசுப்புளுக்களின் எதிரி - 'கம்பூசியா மீன்கள்'

இந்த நல்ல திட்டத்தை திரும்பவும் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று திரும்பவும் செயல் படுத்தப்படும் இந்த திட்டம் பொது மக்கள் அனைவருக்கும் ஆறுதலளிக்கிறது. ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் மீன்களை விடுவதோடு நிறுத்தி விடாமல் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளின் கிணறுகளிலும் விட வேண்டும்" என்று தெரிவித்தார்.


கம்பூசியா மீன்கள் விடும் பணியில் ஊழியர்கள்


மலேரியா நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போதிலும், நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

*  மழை நீர் மற்றும் குடிநீரில் உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

*  வீட்டில் உள்ள மழை நீர் தேங்ககூடிய பயன்படுத்தாத உரல், தேங்காய் மூடி, டயர், பெயின்ட் டப்பாக்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* வீட்டில் குடிநீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

*தண்ணீரில் உள்ள புழுக்கள் சிறிது நாட்களில் கொசுவாக மாறிவிடும். எனவே, தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகளில் சிறிய புழுக்கள் இருந்தால், நீரை துணியால் வடிகட்ட வேண்டும்
.
*  பயன்படுத்தாத கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்ப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாநகராட்சி மலேரியா பிரிவை அணுகவும்.

*  செப்டிங் டேங்க் காற்று போக்கியில் கொசுவலையை கட்டி வைக்கவும். செப்டிங் டேங்கை ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

* குளிர் காய்ச்சல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும்.


வீடுகளின் கிணற்ற்றுக்குகுள் மீன்கள் விடப்படும் காட்சி


மலேரியா கொசுப்புழுக்களை அடியோடு அழிக்கும் கம்பூசியா மீன்களை கிணறுகளில் விடும் திட்டம் ஒரு பக்கம் நடைபெற்றாலும் வெளியே உலவும் மலேரியா கொசுக்களை ஒழிக்க புகை அடிப்பதையும் அனைத்து பகுதிகளிலும் நகராட்சியினர் துரிதப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment