தேடல் தொடங்கியதே..

Friday 30 March 2012

கீழக்கரையில் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் 'பத்திரப் பதிவு அலுவலகம்' !

தமிழக அரசின் நடப்பாண்டுக்கான புதிய நிதி நிலை அறிக்கை (பட்ஜெட் 2012-2013) தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, சொத்துக்கள் மீதான வழிகாட்டுதல் மதிப்பு உயர்வானது, ஏப்ரல் 1 ஆம் தேதி (01.04.2012) முதல் அமலுக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.




சார்பதிவாளர் அலுவலகம், கீழக்கரை


கூட்ட நெரிசலில் பத்திரப் பதிவு அலுவலகம்

நம் கீழக்கரை நகரிலும், பத்திரப் பதிவு அலுவலகம், வேலை நேரம் முழுதும், சொத்துக்களை பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. அவசர கோலத்தில் சொத்துக்களை பதிவு செய்ய முண்டியடிக்கும் பொதுமக்களை கட்டுப்படுத்த, முறையாக அனைவருக்கும் 'டோக்கன்' வழங்கப்பட்டு  சார்பதிவாளர் அறைக்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.


டோக்கனோடு காத்திருப்போரின் ஒரு பகுதி

பத்திரப் பதிவுக்கு காத்திருக்கும் பெண்கள்  


இது குறித்து சாலைதேருவைச் சேர்ந்த சீனி முஹம்மது ஆலிம் அவர்கள் கூறும் போது "தமிழக அரசின் பட்ஜெட்டில், வழிகாட்டுதல் மதிப்பு, இப்போது இருக்கும் தொகையை விட ஏறக்குறைய 250% உயர்த்தப்பட்டு இருப்பதால், பத்திரப் பதிவு செய்ய தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


சீனி முஹம்மது ஆலிம் அவர்கள்
ஒரே நேரத்தில் அதிகமானோர் இங்கு குவிவதால், பத்திரப் பதிவு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். புதிய மதிப்பினை செயல்படுத்த இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் தான், இந்த அளவுக்கு கூட்டம் காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.


கடும் பிஸியில் பத்திர எழுத்தர்கள் !
 


பொதுமக்களின் மேலான கவனத்திற்கு 

பழைய வழிகாட்டுதல் மதிப்பின்படி, பத்திரம் பதிய வேண்டுமென்ற அவசரத்தில், பத்திரத்தில் அச்சிடப்பட்டிருக்கும்  பெயர், முகவரி, சர்வே எண், பட்டா எண், நான்கு மால்கள், தாய் பத்திரத்தின் பதிவு எண்கள் மற்றும் வருடம், உட்பிரிவு புல எண்கள்  போன்ற சரத்துக்களை சொத்துக்களை வாங்குவோரும், விற்போரும் தெளிவாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திட வேண்டாம். அவ்வாறு தவறுகள் ஏற்படும் போது, பின்னாளில் தேவையற்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.

வேகத்துடன்.. விவேகமும் இருப்பது நல்லது...  கவனம் தேவை !

No comments:

Post a Comment