தேடல் தொடங்கியதே..

Sunday 22 April 2012

கீழக்கரையில் இன்று (22.04.2012) நடைபெறும் இலவச பொது மருத்துவ முகாம் !

கீழக்கரையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை நடத்தும் 'இலவச பொது மருத்துவ முகாம்' இன்று (22.04.2012) காலை 10 மணி முதல் பழைய குத்பா பள்ளித் தெரு மக்தூமியா பள்ளி வளாகத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோய் கண்டறியும் சிகிச்சை நடை பெற்று வருகிறது. 



 


இது குறித்து இந்த முகாமின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் கூறும் போது "இங்கு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான தீவிர அறுவை சிகிச்சைகள், கருப்பை நோய்கள், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும்  நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் இலவச மருந்து மாத்திரைகள் அனைத்தும்  வழங்கப்படுகிறது. 


 



மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், உடனடியாக தெரிவு செய்யப்பட்டு பயனடைய வழி காட்டப்படுகிறார்கள். இந்த முகாமை பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு :   திரு.சுரேஷ் குமார் - 7373004953

No comments:

Post a Comment