தேடல் தொடங்கியதே..

Tuesday 24 April 2012

கீழக்கரையில் நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்க இன்னும் பத்து நாள்களே உள்ள நிலையில், கீழக்கரையில் வெயிலின் கடுமை நாளுக்கு நாள் தீயாய் தகித்துக் கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அக்னி நட்சத்திரத்தின் முன்னோட்டத்தை, பெரும் அவதியுடன் அனுபவித்து வந்தனர்.


நள்ளிரவு 1 .30 மணியளவில் எடுத்த புகைப்படம் (இடம் : N .M .T .தெரு)


இந்நிலையில், கீழக்கரை சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணியளவில் விட்டு விட்டு  லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த தூரல் நள்ளிரவு 1:15 மணியளவில் கன மழையாக மாறியது.

இடம் : லெப்பை தெரு அருகில் (நேரம் : மாலை 5 மணி)



பலத்த மின்னலுடன் கூடிய இடி முழக்கம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் உறக்கத்தில் இருந்த பலர் இடி முழக்கத்தின் சப்தத்தால் திடுக்கிட்டு எழுந்தனர். மழை நீர் தெருக்களில் ஆறாக ஓடியது. அதிகாலை குளிர் காற்றுடன் உதயமானது. நள்ளிரவில் பெய்த கோடை மழை காரணமாக, கீழக்கரை நகரம் மட்டுமல்லாது, அனைத்து மக்களின் உள்ளங்களும் குளிர்ந்துள்ளது.


UPDATED PHOTO (TIME 4:30 PM)


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், நேற்று காலை முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கீழக்கரை, இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது (24.04.2012) பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. ( கூடுதல் புகைப்படங்களுடன் - நேரம் : மாலை 5 மணி )




சூழ்ந்திருக்கும் மழை மேகம் (இடம் : சின்னக்கடைத் தெரு)

இடம் : வள்ளல் சீதக்காதி சாலை
UPDATED PHOTO (TIME 4:30 PM)
எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த ஒற்றை  மரம், பரந்த சமவெளி பகுதி ஆகியவற்றில் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

1 comment: