தேடல் தொடங்கியதே..

Tuesday 29 May 2012

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி - எழுச்சியுடன் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் !

நம் கீழக்கரை நகரில் பொது நல சேவைகளை முன்னிறுத்தி, அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும், சமூக நல அமைப்பாக சிறப்பாக உருவெடுத்திருக்கும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்திருக்கும் அஹமது முஸ்தபா வணிக வளாகத்தில் (பாண்டியன் கிராம வங்கி அருகில்) நேற்று (28.07.2012) இரவு 7.30  மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.




நல்ல பல சேவைகளை, நம் நகருக்கு ஆற்ற முனைந்திருக்கும் இந்த இயக்கத்தின் அலுவலகத்தினை 'HSC காக்கா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அல்ஹாஜ்.H. செய்யது அப்துல் காதர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். ஜனாப்.ஹமீது அப்துல் காதர் காக்கா மற்றும் முன்னாள் ஸ்டேசன் மாஸ்டர் ஜனாப். செய்யது இபுறாகீம் காக்கா ஆகியோர்கள் தலைமை தாங்கினர்.





ஜனாப்.P.A.Y. நூருல் அமீன் காக்கா, கீழக்கரை வர்த்தகர் சங்க தலைவர் ஜனாப். அஹமது சஹாப்தீன் காக்கா, கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஜனாப். ஹாஜா முகைதீன் காக்கா மற்றும் K.R.D.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல சங்க நிர்வாகிகள் பாரதி, ஹாஜா அனீஸ், அப்துல் அலி சித்திக், பசீர், கெஜி என்கிற கஜேந்திரன், சூசை இராயப்பன், விஜயன் நகர் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 




கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முயற்சியில் நடைபெற்ற மருத்துவ முகாம் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி.
                                 http://www.keelaiilayyavan.blogspot.in/2012/04/17042012.html


நம் கீழக்கரை நகரின் சமூக நலனில் மிகுந்த அக்கறையுடன் பேரார்வம் கொண்டு, பொது நல தொண்டாற்ற, சேவை மனப்பாங்கோடு, நல்ல தலைமையின் கீழாக ஒருங்கிணைந்திருக்கும், 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மென் மேலும் வளர எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

1 comment: