தேடல் தொடங்கியதே..

Tuesday 14 August 2012

கீழக்கரை தாசிம் பீவி மகளீர் கல்லூரியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி - மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கடந்த (11.08.2010) அன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் ஜனாப்.காலித் புகாரி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது வரவேற்புரை ஆற்றினார். மாணவி ஷானாஸ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


மாவட்ட கலெக்டர் திரு.நந்தகுமார், நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, முகம்மது ஹாருன் ஆலிம், துணை முதல்வர் நாதிரா கமால் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் கதிஜா பாமிதா ஆலிமா துஆ ஓதினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழக்கரை மேலாளர் சேக் தாவுது மற்றும் கல்லூரி மேலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் துறை தலைவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment