தேடல் தொடங்கியதே..

Thursday 9 August 2012

கீழக்கரையில் மிதமான மழையுடன் நிலவும் ரம்மியமான சீதோசன நிலை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வெயிலின் உக்கிரம் தணிந்து காணப்பட்ட நிலையில், நம் கீழக்கரை நகரில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இதனால் ரமலான் நோன்பு வைத்திருந்த இஸ்லாமிய மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.


இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில், வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கார் மேகங்கள் தென்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று (08.08.2012) மாலை 6 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் லேசான தூறல் விழுந்தது. இரவு 7 மணியளவில் மிதான சாரல் மழை பெய்ய துவங்கியது. கடும் புழுக்கத்தில் அவதியுற்ற பொதுமக்கள் மண் வாசனையை நுகர்ந்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




இன்றும் (09.08.2012) பிற்பகல் 4 மணியிலிருந்து குளிர்ந்த தென்றல் காற்றுடன் லேசான தூறல் விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் கீழக்கரை நகர் முழுவதும் ரம்மியமான சீதோசன நிலை நிலவுகிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment