தேடல் தொடங்கியதே..

Wednesday 15 August 2012

கீழக்கரையில் களை கட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் !

நம் இந்திய தேசம் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற இந் நன்னாளிலே நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கீழக்கரையில் நகராட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் இன்று (15.08.2012) காலை சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு, சுதந்திரத்திற்காக உயிர் நீர்த்த தியாக திருமகன்களை நினைவு கூர்ந்தனர். விழா இறுதியில் மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டனர். 


கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தில் தேசியக் கொடி ஏற்றும் காட்சி!

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் அலுவலக வாயிலில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியளவில் நடை பெற்றது. கழகத்தின் செயலாளர் ஜனாப்.M.U.V.முகைதீன் இபுறாகீம் வரவேற்புரை ஆற்றினார். கழகத்தின் தலைவர் ஜனாப்.A.M.S.தமீமுதீன் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். கழகப் பொருளாளர் ஜனாப்.A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் சுதந்திர தின உரையாற்றினார்.



இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தீவிரவாதம் போன்ற தீவினைகள் இல்லாத, தாய் திரு நாட்டை வென்றெடுக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் துணை தலைவர் திரு.M.மாணிக்கம், நிர்வாகிகள் ஜனாப்.N.முசம்மில் ஹுசைன், ஜனாப்.M.சீனி முஹம்மது சேட், ஜனாப்.S.சீனி பாபா பஹ்ருதீன், ஜனாப்.M.I.செய்யது சாகுல் ஹமீது, ஜனாப்.L.பவுசுல் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த 66 வது சுதந்திர தின திரு நாளிலே, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment