தேடல் தொடங்கியதே..

Sunday 16 September 2012

முஹம்மது நபிகளை அவமதிக்கும் அமெரிக்கன் திரைப்படம் - கீழ‌க்க‌ரையில் கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - உருவ பொம்மை எரிப்பு !

இறைவனின் இறுதித் தூதராகவும், முஸ்லீம்களால் உயிரினும் மேலாக மதிக்கப்படும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும்  ‘innocence of muslims’ திரைப்படத்திற்கு எதிராக, உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கண்ணுற்ற லிபியா, எகிப்து உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த முஸ்லீம்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை கண்டித்து உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பல்வேறு அமைப்பினரால் அமெரிக்க தூதரகமும் முற்றுகையிடப்பட்டு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. 



இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் கீழ‌க்க‌ரை வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் ஏராள‌மான இஸ்லாமிய‌ பெரும‌க்க‌ள் திர‌ண்டு க‌ண்ட‌ன‌ முழ‌க்க‌ங்க‌ளை எழுப்பியவாறு ஆர்பாட்ட‌த்தில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தைக் அவ மரியாதையாக சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து பலர் மிகுந்த ஆக்ரோசத்துடன் தங்கள் கண்டன வாசகங்களை பதிவு செய்தனர். எவ்வித முன்னறிவிப்பின்றி ஆர்பாட்டம் ஆரம்பித்தாலும், ஏராள‌மான‌ இளைஞ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம் ந‌டைபெறும் இட‌த்திற்கு சிறிது நேரத்திலேயே குவிந்தனர்.



‘எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, அமெரிக்காவே முஹம்மது நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தன்த்தை இஸ்லாத்தில் காட்டாதே' போன்ற வாசகங்களை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தொடர்ந்து முழங்கினர். முடிவில் இந்த திரை படத்தின் தயாரிப்பாளன் யூதன் சாம் பாலிசி போல் உருவாக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு துடப்பக்கட்டை, செருப்பு மாலை போடப்பட்டு, நடு ரோட்டில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 14 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

(சென்னையில் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டத்தில் களமிறங்கிய இஸ்லாமிய அமைப்பினர்கள் )

முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சான முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் செய்து வருகிறார்கள். இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள் தண்டிப்பதாக தெரியவில்லை. ஆனால் இனி அவர்கள் அப்படி தண்டிக்காமல் இருந்து விட முடியாது என்பதை, உலகமெங்கும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் போராட்டங்கள் தெளிவு படுத்தி கொண்டிருக்கிறது.



தற்போதைய சூழலில் எகிப்து, லிபியா, இந்தியா நாடுகளில் மட்டுமல்லாது ஜோர்டான், இஸ்ரேல், எமன், லெபனான், துனீஷியா, சூடான், நைஜீரியா, பாலஸ்தீனம், வெஸ்ட் பேங்க், மொராக்கோ, எத்தியோப்பியா, கென்யா, ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, ஓமன், பஹ்ரைன், கத்தார், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, ஆஸ்திரேலியா, லண்டன், இந்தோனேசியா என்று உலகின் மூளை முடுக்கெல்லாம், அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய கொடுஞ்செயலை கடுமையாக கண்டிப்பதோடு மட்டும் நில்லாமல், 'இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரையும் உலக நீதி மன்றத்தின் முன்னால் விலங்கிட்டு நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் என்பதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும், இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்' என்பதும் அனைத்து இஸ்லாமியர்களின் எதிர் பார்ப்பாய் இருக்கிறது.

1 comment:

  1. வார்த்தைகளை தேடினால் கண்ணீர் தான் வருகிறது.ஆதிக்க வெறி பிடித்த அமெரிக்க இஸ்ரேலிய சொறி நாய் களின் தீய செயலால் இன்று சர்வ தேச அளவில் முஸ்லீம் சமுதாயமே கொதிப்படைந்துள்ளது.

    யா அல்லாஹ் உனது ஹபீப் எங்களின் இறுதி ரசூல் கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்ல லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை, திட்டமிட்டு அவ மரியாதை செய்ய நினைத்த அந்த கூட்டு சதியாளர்களை மஹ்ஷர் வரை காத்திருக்காமல், எஙகளின் உணர்வுகளோடு நீயும் பங்கு கொண்டு அந்த மூதேவிகளை எங்கள் கண்கள் குளிர சின்னபின்னம் படுத்தி விடு இந்த பூமியிலேயே.. அதுவும் இந்த விநாடியாகவே இருக்கட்டும்.. அது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்..

    மேலும், இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்..இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்.. ஆமீன், ஆமீன் யாரப்பில் ஆல்மீன். அல்லாஹு அக்பர்..

    ReplyDelete