தேடல் தொடங்கியதே..

Wednesday 3 October 2012

கீழக்கரையில் குப்பைகள் உருவாக்கிய 'தீண்டாமைச் சுவர்' - பாதை சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் பொதுமக்கள் அவதி !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடுத்தெரு ஜூம்மா பள்ளி பின்புறம், (நாச்சியா சிமெண்டு கடை சந்து) உள்ள பொது மக்கள் பயன்படுத்தும் சந்தில் முகப்பு பகுதியில், பின்னிரவு நேரங்களில் துர்நாற்றம் மிகுந்த குப்பைகளையும், கோழிக் கழிவுகளையும் சிலர் கொட்டி குவித்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் நடுத்தெரு ஜூம்மா பள்ளியின் மைய வாடி சுவற்றினை ஒட்டி குப்பைளை குவித்து வந்தனர். நடுத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், பல்லாண்டு காலமாக இங்கு கொட்டப்பட்டு வந்த குப்பைக்கு முடிவு வந்தது. ஆனால் தற்போது இதற்கு எதிர்புறம் உள்ள சந்தின் நுழைவுப் பகுதியில் குப்பைகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் ஜனாப். A.M.S. தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இங்கு குவிந்திருக்கும் குப்பைகளால் உருவாகி இருக்கும் தீண்டாமை குட்டிச் சுவரினால் இந்த பாதையினை பயன்படுத்த முடியாமல், இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். குப்பைகளால் பொது வழி முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டதால், பெண்களும், முதியவர்களும் 100 மீட்டர் தூரம் பாதை சுற்றியே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளதோடு, இந்த பகுதியில் மோசமான சுகாதரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் பலருக்கு கண்டு பிடிக்க முடியாத மர்ம காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு நலன் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment