தேடல் தொடங்கியதே..

Tuesday 16 July 2013

கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

கீழக்கரை நகரில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள், நோன்பு திறக்க ஆயத்தமாகும் போது, நோன்புக் கஞ்சி தவிர, ஏனைய உணவுகளை பெரும்பாலும் வீட்டிலேயே சமைக்கின்றனர். அது போலவே ஒவ்வொரு நாளும் பழங்களும், பழ ரசங்களும் அந்த பட்டியலில் தவறாது இடம் பெறுகிறது. 




இதற்காக பழக் கடைகளுக்கு விஜயம் செய்யும் நோன்பாளிகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கீழக்கரை செக்கடிப் பகுதியில் உள்ள பழக் கடைகளில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, வாட்டர் மெலான், அன்னாசி, ஆரஞ்சு, மாம்பழம், போன்ற பழங்களின் விற்பனை அமோகமாக நடை பெற்று வருகிறது. 

கீழக்கரை ரமலான் ஸ்பெசல் பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)


கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)



<<<<<  கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

No comments:

Post a Comment