தேடல் தொடங்கியதே..

Saturday 20 July 2013

கீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமுமுக நிர்வாக கூட்டத்தில் முடிவு !

கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக கூட்டம் 19. 07. 2013 அன்று  நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் தலைமையில் நகர் துணைத் தலைவர் கோஸ் முகம்மது முன்னிலையில் நகர் நிர்வாக கூட்டம் நடைபெற்று, இறுதியாக பின் வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 



1. கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்தும், முறையான குடிநீர் வழங்க கோரியும் வரும் 2 6. 07. 13 அன்று வெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்

2. ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

3. புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது. 

இந்த நிகழ்வின் போது, கீழக்கரை தமுமுக மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம், மமக துணை செயலாளர் புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.

தகவல் : நண்பன். கீழை இர்பான் 


FACE BOOK COMMENTS :
  • Mohamed Irfan நமது ஊருக்கு வரும் நிதியை சிரலிக்கும் நிர்வாகத்தை இன்னும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தால் அல்லாவிடம் நாமும் பதில் சொல்ல வேண்டும். நமது வீட்டில் வரும் நோய்களுக்கு முடிவுகட்டுவோம்.... கீழக்கரை குடிநீர் பிரச்சனையை ஒழித்திடுவோம்.... முன்மாதிரி நகராட்சியாக மாற்றவிடுவோம்..... தயாரகுங்கள் உங்களுக்கு நடக்கும் அநீதிகளை தடுக்க..... அணிதிரல்வீர் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி..... அநீதியை அழிக்க மக்கள் வெள்ளம் திரளட்டும்..... 26 07 ஆர்பாட்டம் கீழக்கரை வலாற்றில் பொறிக்கபடும்... அமைதிக்கு பிறகு தான் புயல் என்பார்கள் ஆனால் இன்று நமது ஊர் மக்கள் சுனாமியாக புறப்பாட தயாரகுகிறார்கள்... மக்கள் எழுச்சியில் தான் மாபெரும் மறுமலர்ச்சி நடைபெறும்.. அந்த நாள் தான் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி மக்கள் எழுச்சி.....
    July 20 at 11:31am · Like · 4

  • Fouz Ameen சுடர் விட்டு எறியும் நெருபை பார்த்து நண்பருடைய வயிறு எரிகிறது என்று நினைக்கிறேன்... சுடர் விட்டு எரியும் நெருப்பு அணைவதற்கு அல்ல நண்பரே நமது ஊருக்கும் இயக்கத்திற்கும் ஒளி தருவதற்கு என்பதை நீங்கள் இன்னும் சில காலத்தில் அறிவீர்...
  • Jahufar Sadiq இனி அடுத்து வர இருக்கும் நிர்வாகம் அல்லாஹுவுக்கும் மறுமைக்கும் பயந்து நாங்களோ எங்கள் குடும்பமோ எங்கள் வாரிசோ அமானிதத்தை உண்ணமாட்டோம், உண்ண நினைக்கவும் மாட்டோம் ரசூல் (ஸல்) காட்டித்தந்தபடி அமானிதம் அது எங்களுக்கு ஹராம் என்று வல்ல அல்லாஹுவின் மீது சத்தியமிட்டு நடக்க நினைப்பவர்கள் பொறுபேற்க வருவார்களா? இல்லே நாமும் நம்ம ஈவுக்கு போட்டுத்தாக்குவோமே என்கிற எண்ணத்தோட வருவாங்களா?

    தற்போதைய நிர்வாகம் தான் மட்டும் தன்னோட பையை நிரப்பிக் கொள்றாங்க, சக கவுன்சிலர்களையும் கூப்பாடு போடும் சில அரசியல் சார்ந்த கட்சிகளையும் கண்டு கொள்வதில்லை அதாவது அடிக்கிறதுல பங்கு பிரிக்கிறது இல்லே அதனாலதான் இப்படி கொடிபிடிக்கிராங்கெ..... கொஞ்சத்த எலும்புத் துண்டு மாதிரி தூக்கிப்போட்டா நக்கிக்கிட்டு சும்மா கெடப்பாங்கென்னு சொல்றாங்களே அதப்பத்தி....... வாசகர்களின் அதோடு அவங்க சொல்றமாதிரி கூட்டத்தாரின் கருத்து ......?

    எது எப்படியோ முந்தைய காலங்களில் இப்படிப் பட்ட பதவி நாற்காலிகளில் தரமானவர்கள் அமர்ந்தார்கள். அந்த காலகட்டங்களில் இப்படிக் கேவலத்தனமா யாரும் நடந்துகிட்டாங்கன்னு செய்திகள் கேள்விப்படலே.
  • King Haji ஜகுபர் சாதிக் அவர்களே நீங்க 18 வார்டு கவுசிலர் ஐந்து நபர்களிடம் வரி கைட்டி தருகின்றன் என்று மோசடி செய்ததை நடு ரோட்டில் வைத்து 20 வார்டு கவுசிலர் கேட்டதுக்கு வாயை பொத்தி கொண்டு போனார் நீங்க அந்த ஆளுக்கு உத்தமன் என்று சட்பிகட் கொடுத்த ஆளுதானா நீங்க இப்போழுது துணை செர்மன்னிடம் லஞ்சம் வாங்கிகொண்டு அவர் செய்த தில்லு முல்லு துணை போகிறார் நீங்க உண்மையான ஆளா இருந்த எல்லாத்தையும் நீங்க விமர்சிகனும்.
    ஊரில் உள்ள எல்லாருக்கும் கொழப்பம் பண்ணுறவங்க யாருண்டு தெரியும் 500 வாய்கால் மூடி போடுறதுக்கு 350 மூடி போட்டர் துணை சேர்மன் அதற்கு மண் அள்ளி போடதிலும் ஊழலுக்கு துணை போன்னவர்த்தன் உங்க தலைவர் 18வார்டு கவுன்சிலர்

  • Asan Hakkim அஸ்ஸலாமு அழைக்கும் கிங் ஹாஜி காக்கா நீங்கள் கேட்கிற கேள்வியிலே பேஸ்புக் தளமே சும்ம அதிர்ருதுல.
  • King Haji இதுக்கு மூண்ணாடி நிர்வாகத்தில் நம்மா ஊர் என்மோ சிங்கப்பூர் மாதிரி இருந்தது ஏன ஓவர் பில்டப் விட கூடாது ஜகுபர் சாதிக்கு @ நாங்களும் கீழக்கரை தான் ஒரு பொறுமைக்கும் எல்லை உண்டு சும்மா facebook இருக்கு என்று எதையும் எழுதகூடாது முதலில் நம்மா சுத்தமான ஆல பார்க்கணும் நான் என்ன நீனைகிறேன் நீங்க என சரியான ஆல இருந்தா 18 வார்டு இப்போ வண்டி வச்சு இருகார் எப்படி வந்தது என்ன கேளுங்க இது வாரை துணை செர்மன்னை பத்தி குறை சொல்லதுக்கு தான் இந்த வண்டி அதுக்கு இந்த கொடுத்தது ஒரு 50000கொடுத்து வந்தர்தான்.

    துணை சேர்மன் காசு போட்டவன் காசு எடுக்க தான் பார்பான் அதற்கு சேர்மன் உடன்படவில்லை என்றால் சேர்மன் லஞ்சம் வாங்குவர் என பொஸ்ட் அடிப்பது எல்லாம் நடக்கும் ஏற்கனவே 20 வார்டுகவுன்சிலர் இடி மின்னல் ஹாஅடிகாதற்கு ஜா துணைசெர்மனுடன் இருந்தார் இந்த குருப்பு பண்ணுகிற தில்லு முல்லு கண்டு விலகி போய்விட்டார் 9வார்டுக்கு துணை சேர்மன் ரோடு போட்டார் அது தரமில்லை என வார்டு மக்கள் சொல்லுது அதை கேட்டர நோட்டீஸ் புகழ் 18வார்டு அதைமுல நோட்டீஸ் அடிக்கணும் அடிகாதாற்கு எல்லாம் பணம்தான் மக்களே நீங்க சிந்திங்க

No comments:

Post a Comment