தேடல் தொடங்கியதே..

Sunday 14 July 2013

கீழக்கரையில் பட்டாசுக் குடவுனில் தீ விபத்து - நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்கள் இணைந்து மீட்புப் பணிகள் தீவிரம் !

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் லெப்பை மாமா டீக் கடை அருகே, செக்கடிப் பகுதியில் உள்ள கோல்டன் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசுக் குடவுனில் இன்று இரவு 8.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.








தீ விபத்து ஏற்பட்ட உடனே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தற்போது தீயணைப்பு வீரர்களுடன் பொது மக்களும் இணைந்து மீட்புப் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு குடவுன் அருகே இருந்த தையல் கடை, ரெடிமேட் கடை உள்ளிட்ட நான்கு கடைகள் பலத்த சேதமடைந்து இருப்பதாக தெரிகிறது. இறைவன் அருளால் உயிரிழப்புகள் ஏதுமில்லை என தெரிகிறது.

No comments:

Post a Comment