தேடல் தொடங்கியதே..

Thursday 14 November 2013

கீழக்கரை நகரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்க ரோட்டரி சங்கம் வேண்டுகோள் !

கீழக்கரை நகரில் பல இடங்களில் அபாயத்தை எதிர் நோக்கி இருக்கும் மின் கம்பங்கள் பல காணப்படுகிறது. பார்க்கும் போதே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் தோற்றம் காட்சி அளிக்கிறது. நகரின் மிக பிரதான சாலையாக இருக்கும் வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே உள்ள ஒரு மின் கம்பமும் (மின் கம்பம் எண் இன்னும் எழுதப்படாமல் விடப்பட்டுள்ளது), ஆடறுத்தான் தெருவில் இருக்கும் ஒரு மின்கம்பமும் (மின் கம்பம் எண்: 7/8) மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. 


 இடம் : ஆடறுத்தான் தெரு




  இடம் : வள்ளல் சீதக்காதி சாலை

இது போன்ற ஆபத்தை எதிர் நோக்கி இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக அகற்றி புதிய மின் கம்பங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மின்சார வாரியத்தினறுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கீழ்க்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கீழ்க்கரை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி அல் நூர் ஆப்திக்ல்ஸ் ரோட்டரியன் ஹசன் அவர்கள் கூறும் போது "பொது மக்கள் அச்சப்படும் வகையில் நகரின் பல பகுதிகளில் இது போன்ற மின் கம்பங்கள் பல காணப்படுகிறது. இதனை சம்பந்தப்ட்ட மின் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, ஆபத்துகள் ஏற்படும் முன்  அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுததுள்ளோம். அது வரை இறைவன் தான் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment