தேடல் தொடங்கியதே..

Monday 5 March 2012

கீழக்கரையில் இன்று நடந்த காவல் துறை, பொது மக்கள் கலந்துரையாடல் - ஓர் நல்ல துவக்கம் !

நமது கீழக்கரை நகரில் இன்று (05.03.2012) மாலை 5 மணியளவில், காவல் துறையினர், பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணாடி வாப்பா மஹாலில் நடைபெற்றது.




இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய காவல் ஆய்வாளர் இளங்கோவன் அவர்கள் பேசும் போது, "கீழக்கரை நகரில் குற்ற செயல்களைத் தடுக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து நம் ஊருக்குள் வேலை பார்க்கும் கட்டிட தொழிலாளர்கள் பற்றிய முழு விபரங்களை, அவர்களை வேலையில் அமர்த்தி இருக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மிக விரைவில் காவல் நிலையத்தில் அளித்து எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் நாங்கள் இங்கு சிறப்பாக பணியாற்றி, விருதுகள் பல பெற்று, கீழக்கரை காவல் நிலையத்திற்கு பெருமை சேர்ப்போம்" என்று உறுதியளித்தார்.  




இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பழைய குத்பா பள்ளி  தெருவைச் சேர்ந்த லெப்பை தம்பி அவர்கள் கூறும் போது, "நம் நகர் நலனுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இஞ்சினியர் ஆசாத் அவர்களுக்கும், இஞ்சினியர் கபீர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரம், இது போன்ற பொது மக்களுக்கு அவசியமான, விழிப்புணர்வு  நிகழ்சிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. கீழக்கரை பொது மக்கள் அனைவரும் இது போன்ற கலந்துரையாடல் நிகழ்சிகளை தவற விடாமல் கலந்து கொண்டு காவல் துறையினருக்கு தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார். 




இந்த  காவல் துறையினர், பொது மக்கள்  கலந்துரையாடல் நிகழ்ச்சி 'ஒரு நல்ல துவக்கமாக'  இருந்து, இது போன்று ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்பட்டு, பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்டறிந்து, அதற்கொப்ப காவல் துறையினர் சிறப்பாக சேவைகள் செய்ய ஆவன செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

No comments:

Post a Comment