தேடல் தொடங்கியதே..

Tuesday 6 March 2012

கீழக்கரையில் 'நோ பார்கிங்' அறிவிப்புகளை மதிக்காத பொதுமக்கள் ! திருந்தப் போவது எப்போது ?

நமது கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், கு. த கடைப் பகுதியில்  இருந்து ஜும்மா பள்ளி பகுதிவரையிலும் (வலது புறம்), போஸ்ட் ஆபீஸ் தெருவில் லெப்பை மாமா டீக் கடையில் இருந்து முஸ்லீம் பஜார் வரையிலும் (இடது புறம்) போக்குவரத்துக் காவல் துறையினரால் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக (NO PARKING) அறிவிக்கப்பட்டு, இன்று வரை இந்தத் தடை அமுலில் இருக்கிறது.


கீழக்கரை ஜூம்மா பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள 12 அறிவிப்பு பலகைகள்

ஆனால் இந்த அறிவிப்புகளை எல்லாம் காதில் வாங்காமல், காவல் துறையினரால் வைக்கப் பட்டிருக்கும் 'நோ பார்கிங் அறிவிப்பு 'பலகைக்கு மிக அருகிலேயே தங்கள் வாகனங்களை பொது மக்கள் நிறுத்தி செல்வது கேலிக் கூத்தாக இருக்கிறது.


இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில் வசிக்கும் 'வீனஸ்' பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் கூறும் போது, "பொது மக்கள் யாரும் இந்த அறிவிப்புகளை  மதிப்பது இல்லை.  15 மீட்டர் முகப்பு அளவுள்ள ஜூம்மா பள்ளி முன் பகுதில் மட்டும் '12 நோ பார்க்கிங் போர்டுகள்' காவல் துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இது போன்று வேறு எங்கும் இவ்வளவு அறிவிப்பு பலகைகளை காண முடியாது. இப்படி அறிவிப்புகள் முறையாக வைத்தும், இன்னும் பொதுமக்கள் திருந்தவில்லை. போர்டு அருகிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். கேட்டால், தொழுகைக்கு நிறுத்தி விட்டு செல்கிறோம் என்று சாக்கு, போக்கு சொல்லி நழுவி விடுகின்றனர்." என்று தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.


அறிவிப்பை மதிக்காத அறிவிலிகள் !

இது குறித்து புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது , "இந்த நோ பார்கிங் பகுதிகளில், பெரிய கண ரக வாகனங்களினால் தான் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.


கனரக வாகனங்களால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து - கீழக்கரை முஸ்லீம் பஜார்



கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் சொகுசு பேருந்துகள் தவிர, சென்னைக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் மற்றும் மக்கள் நெரிசல் நேரங்களில் வலம் வரும் சரக்கு லாரிகள் போன்றவற்றால் பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ஆகவே காவல் துறையினர் இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெளிவாக விளக்கி கூறினார்.


கீழக்கரை முஸ்லீம் பஜாரில் போக்குவரத்து நெரிசல் !

என்ன கொடுமை சார் இது !?


இங்கு 'சிறு நீர் கழிக்காதீர்கள்' என்ற அறிவிப்பு பலகையின் மீதே சிறு நீர் கழிப்பதும், 'எச்சில் துப்பாதீர்கள்' என்று எழுதி இருந்தால், அதன் மீதே காரி உமிழ்வதும், இங்கு 'புகை பிடிக்காதீர்கள்' என்று போர்டு வைத்திருந்தால், அதன் மீதே புகையை ஊதுவதும், இங்கு 'குப்பைகள்   கொட்டாதீர்கள்' என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தால் அதன் மீதே குப்பையை கொட்டுவதும், நாங்கள் காலம் காலமாக செய்யும் மரபு; அதில் இந்த நோ பார்கிங் மட்டும் என்ன விதி விலக்கா ? என்று கேட்கும் அன்பானவர்களே..! சிந்தியுங்கள்... இந்த அறிவிப்பு பலகைகளுக்கு பின்னால் நம் ஒழுக்க மரபுகளின் சித்தாந்தங்கள் ஒழிந்திருக்கிறது..என்பதனை... இனியாவது ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம் !  

1 comment: