தேடல் தொடங்கியதே..

Friday 6 April 2012

கீழக்கரையில் இலவச 'ஆஸ்துமா விழிப்புணர்வு' முகாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி !

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்குத் தெரு கிளையும், கீழக்கரை ஆயிஷா கிளினிக்கும்  இணைந்து நடத்தும் இலவச ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை (08.04.2012) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆயிஷா கிளினிக்கில் (தெற்குத் தெரு இஸ்லாமியா பள்ளிக்கூடம் எதிரில்) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து கீழக்கரை TNTJ நிர்வாகி ஹாஜா அவர்கள் கூறும் போது  "இந்த முகாமில் சுவாசப் பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் குறிப்பாக சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வாய் வழியாக மூச்சி விடுபவர்கள், தூசி மற்றும் புகை சம்பந்தப்பட்ட பணியில் வேலை செய்பவர்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் மூச்சி விடுவதில் சிரமப்படுபவர்கள், நீண்ட நாள் சளி மற்றும் இருமலுடன் கஷ்டப்படுபவர்கள், மூச்சி விடும் போது 'விசில் சத்தம்' கேட்பவர்கள் கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம்.


TNTJ வெளியிட்டுள்ள நோட்டீஸ்

டாக்டர். நசிரா பர்வீன், டாக்டர். ஆயிஷா பர்வீன் ஆகியோர்கள் சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த முகாமில் நுரையீரல் செயல் திறன் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் முழுவதும் இலவசமாக செய்யப்படுகிறது. சுவாச பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஆஸ்துமா பற்றிய ஆலோசனைகளை, விழிப்புணர்வுகளை இந்த முகாமில் பெறலாம்" என்று தெரிவித்தார்.



அறிவிப்புப் பலகை (இடம் :கிழக்குத் தெரு)


இந்த ஆஸ்துமா விழிப்புணர்வு முகாமில், சுவாச பாதிப்புள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment