தேடல் தொடங்கியதே..

Monday 4 June 2012

தமிழகமெங்கும் இன்று வெளியாகும் 'பத்தாம் வகுப்பு' தேர்வு முடிவுகள் - இணைய தளங்களில் காண ஏற்பாடு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடந்து முடிவடைந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் இன்று (04.06.2012) பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்த தேர்வை பள்ளிகள் மூலம் நேரடியாக 10,84,575 மாணவர்களும்,  தனிர்வாளர்களாக 19,575 பேரும் எழுதி உள்ளனர். நம் கீழக்கரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் 4 தேர்வு மையங்களில் சுமார் 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் ஏதேனும் ஒரு  இணையதள முகவரியை கிளிக் செய்து காணலாம்.






மறுகூட்டல்:

அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்பும்  மாணவர்கள், 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மண்டல தேர்வுத் துறை துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.



கட்டணம் எவ்வளவு?:

பழைய மற்றும் புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ், மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாய்; இதரப் பாடங்களுக்கு 205 ரூபாய். பழைய ஓ.எஸ்.எல்.சி., திட்டத்திற்கும், இதே கட்டணம் பொருந்தும். மெட்ரிக் பாடத் திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் 305 ரூபாய். ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்திற்கு, மொழிப்பாடத்திற்கு 205 ரூபாயும், இதரப் பாடங்களுக்கு 305 ரூபாயும் செலுத்த வேண்டும்.



மதிப்பெண் பட்டியல்:

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 21ம் தேதி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தனித் தேர்வர், தாங்கள் தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் டூ வகுப்பு போலவே, இந்த ஆண்டு முதல்  பத்தாம்  வகுப்பு மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன், எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment